Header Ads



சுவிஸர்லாந்தில் இலங்கை சிறுவர்களுக்கிடையே, அல்குர்ஆன் போட்டி (படங்கள்)


ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையமும், மஸ்ஜித்துல் ரவ்ளா பள்ளிவாசலும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 2017 ஆம் ஆண்டுக்கான அல்குர்ஆன் போட்டி நிகழ்ச்சிகள், அதன் தலைவர் மௌலவி ஹனீப் மொஹமட் தலைமையில் நேற்று சனிக்கிழமை 18 ஆம் திகதி, சூரிச் - எம்ரிசால் மண்டபத்தில் நடைபெற்றது. எகிப்தைச் சேர்ந்த ஹாரி முதாசேம் அலாசாலி, சோமாலியாவைச் சேர்ந்த தூர் அஹ்மட் ஆகியோரை நடுவர்களாக கொண்டு நடைபெற்ற இந்த அல்குர்ஆன் போட்டி நிகழ்வில் சுவிஸில் வசிக்கும் அநேக இலங்கைச் சிறுவர்களின் பெற்றோர்களும், அவர்களின் பெற்றோர்களும் பங்குகொண்டனர். அல்குர்ஆன் போட்டிக்கு மேலதிகமாக சிறுவர் பாடல், நாடகம், பேச்சு ஆகியனவும் நடைபெற்றன. நிகழ்வில் ஏனைய முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்களும் பங்குகொண்டனர்.






No comments

Powered by Blogger.