Header Ads



'ஜனாதிபதியாக கோத்தாபாயவை வர விடமாட்டோம்'

-ரொபட் அன்டனி-

மாகாண சபை­களை கலைக்­கின்ற அதி­கா­ரத்தை புதிய அர­சி­ய­ல­மைப்பில் ஜனா­தி­ப­திக்கு வழங்க மாட்டோம். மேலும் ஒத்­தி­சைவு பட்­டி­யலை நீக்­கு­வ­துடன் கலைக்கும் அதி­கா­ரத்­தையும் திருத்­துவோம். இந்­தி­யாவைப் போன்று நினைத்­த­வுடன் ஜனா­தி­பதி மாநி­லத்தை கலைக்கும் அதி­காரம் இருக்­காது. அதனை நாங்கள் வழங்க மாட்டோம். அவற்றை மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை பலத்­துடன் செய்­யலாம் என்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் ஊடகப் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார்.   

வடக்கு மக்கள் தங்கள் வீரர்­களை நினைவுகூர­வேண்­டு­மானால் ஏனைய இனங்­களை காயப்­ப­டுத்­தாமல் செய்­யலாம். பிர­பா­க­ரனை யாரா­வது நினை­வு­கூ­ர­வேண்­டு­மானால் பிர­பா­கரன் கார­ண­மாக பாதிக்­கப்­பட்டு அநா­தை­யா­கி­ய­வர்கள் காயப்­ப­டாத வகையில் நினை­வு­கூ­ரப்­ப­ட­வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார்.

வீரகேசரி இணையதளத்திற்கு வழங்­கிய விசேட செவ்­வி­யி­லேயே டிலான் பெரேரா இந்த விட­யங்­களை குறிப்­பிட்டார். செவ்­வியின் முழு விபரம் வரு­மாறு

Q: 2020 இல் சுதந் திரக் கட்­சியின் வேட்­பாளர் யார்?

அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் எமது கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக தற்­போ­தைய ஜனா­தி­ப­தியும் எமது கட்­சியின் தலை­வ­ரு­மான மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே இடம்­பெ­ற­வேண்டும்.

Q: ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி சேன முடி­யாது என்று திட­மாக கூறி­விட்டால் வேறு ஒரு­வரை தேட வேண்டும் என நீங்கள் கூறி­னீர்கள். அவ்­வா­றெனின் முன்னாள் பாது காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவை சு.க.வின் வேட்­பா­ள­ராக கொண்டு வரும் முயற் சி­யுள்­ள­தாக கூறப்­ப­டு­வது உண்­மையா?

சுதந்­திரக் கட்­சியின் ஒரு­சிலர் மற்றும் விமல் வீர­வன்ச, கம்­பன்­பில போன்றோர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவை அவ்­வாறு கொண்டு வர முயற்­சிக்­கின்­றனர். ஆனால் நாங்கள் அதனை கடு­மை­யாக எதிர்க்­கிறோம். சுதந்­திரக் கட்சி அதனை கடு­மை­யாக எதிர்க்­கின்­றது. கோத்­த­பாய ராஜ­பக் ஷ ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரா­கினால் அவரால் ஒரு நாளும் வெற்றி பெற முடி­யாது என சுதந்­திரக் கட்­சிக்கு நன்­றாக தெரியும். அவரால் தமிழ் மற்றும் முஸ்லிம் வாக்­கு­களை பெற முடி­யாது. தமிழ் மற்றும் முஸ்லிம் வாக்­கு­களை பெற முடி­யாத வேட்­பாளர் தோல்­வி­ய­டைவார். கோத்­த­பாய தேர்­தலில் போட்­டி­யிட்டு பாரா­ளு­மன்­றத்தில் சேவை­யாற்ற முடியும். சிங்­கள கத்­தோ­லிக்க மக்­களும் அவ­ருக்கு வாக்­க­ளிக்க மாட்­டார்கள். எனவே தமிழ், முஸ்லிம் வாக்­கு­களை பெற முடியும் ஒரு­வ­ரையே நாம் வேட்­பா­ள­ராக நிய­மிக்க வேண்டும். மஹிந்த ராஜ­ப­க் ஷ­வி­னா­லேயே தமிழ், முஸ்லிம் மக்­களின் வாக்­கு­களை பெற முடி­யா­து­விடின் கோத்­த­பா­ய­வினால் முடி­யுமா ?

Q: தற்­போது புதி­தாக உரு­வாக்­கப் பட்­டுள்ள ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் சார்பில் கோத்­த­பாய போட்­டி­யிட்டால்?

வடக்கு, தெற்கு ஆகிய இரண்டு பகு­தி­க­ளிலும் இன­வாதம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் வடக்கில் இன­வா­தத்தை பரப்­பி­ய­வர்­களும் தெற்கில் இன­வா­தத்தை பரப்­பி­ய­வர்­களும் தோல்­வி­ய­டைந்­தனர். இன­வாதம் மற்றும் மத வாதத்தை பரப்பும் தலை­வர்­க­ளினால் வெற்றி பெற முடி­யாது. அதனால் இன­வா­தி­க­ளுக்குப் பயந்து சில நல்ல திட்­டங்­களை நாங்கள் பிற்­போட்டு விடக் கூடாது. ஜனா­தி­பதி தேர்­தலில் மும்­முனைப் போட்டி இடம்­பெற்­றாலும் தமிழ், முஸ்லிம் வாக்­கு­களை பெறும் வேட்­பா­ளரே வெற்றி பெறுவார்.

Q: ஐக்­கிய தேசிய கட்­சியின் சார்பில் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க போட்­டி­யிட்டால் எவ்­வாறு சமா­ளிப்­பீர்கள்?

மஹிந்த ராஜ­பக்ஷ போன்ற ஒரு­வரை தோற்­க­டித்த மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வரை தோற்­க­டிப்­பது ஒரு விடயம் அல்ல.

1 comment:

Powered by Blogger.