Header Ads



மல்வானையில் உள்ள காணி பசிலுக்கு சொந்தமில்லையாம் - அரசு சுவீகரித்தது

மல்வானையில் உள்ள காணி பசில் ராஜபக்சவுக்கு சொந்தமானது அல்ல என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் வழக்கறிஞர் இன்று பூகொட நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கு தொடர்பில் பசில் ராஜபக்சவை இன்று நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன் போதே அவரது சட்டத்தரணி இந்த விடயத்தை நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

எனவே குறித்த காணியை விற்பனை செய்து பணத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு பூகொட நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. கொழும்பில் எத்தனையோ வியாபார நிலையங்கள், முஸ்லிம்களுக்குச் சொந்தமான கட்டடங்கள், ஹோட்டல்களை பலாத்தகாரமாக தனது சொத்தாக மாற்றிய பெருமை இந்த பசிலைச் சாரும்.

    ReplyDelete

Powered by Blogger.