கதீஜா பௌண்டேசனுடைய, பணிகளுக்கு உதவுவதாக பாகிஸ்தான் உறுதியளிப்பு
இலங்கையில் தனது சேவைகளை வழங்கிவரும் கதீஜா பௌண்டேசனுக்கு உதவி வழங்குவதாக பாகிஸ்தான் உறுதியளித்துள்ளது.
நேற்று வியாழக்கிழமை (06) கதீஜா பௌண்டேசன் பணிப்பாளர் மொஹமட் ஹாஜி தலைமையிலான குழுவினருக்கும் கொழும்பிலுள்ள இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் செய்ட் ஷகீல் ஹுசைன் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான சந்திப்பின் போதே இந்த வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கெப்டன் இம்ரான் கானின் பிரத்தியேக செயலாளருடனும் உடனடியாக உரையாடி எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளது.
மேலும் தெற்காசியாவில் சிறந்த புற்றுநோய் வைத்தியசாலையை இலங்கையில் நிர்மாணிக்க கதீஜா பௌண்டேசன் மேற்கொள்ளும் திட்டங்களுக்கு தமது ஆதரவையும் இதன்போது பாகிஸ்தான் தூதுவர் வெளிப்படுத்தியுள்ளார்.
Post a Comment