Header Ads



மஹியங்கனையில் நிலைமை சுமுகம், அச்சமும் தொடருகிறது..!

-விடிவெள்ளி ARA.Fareel-

மஹி­யங்­கனை  பொலிஸார், பொலிஸ் நிலை­யத்தில் ஏற்­பாடு செய்­தி­ருந்த இரு தரப்­பு­க­ளுக்­கு­மி­டை­யி­லான சமா­தானப் பேச்­சு­வார்த்­தையை அடுத்து எதிர்­கா­லத்தில்  பிரச்­சி­னைகள் எது­வு­மின்றி  சமா­தா­ன­மாக வாழ்­வ­தாக  இரு­த­ரப்­பி­னரும் உறு­தி­ய­ளித்­தனர். 

மஹி­யங்­கனை நக­ரி­லுள்ள பன்­ச­லையில்  கடந்த நோன்­மதி தினத்­தன்று பெளத்த தேரர்  ஒருவர்  நிகழ்த்­திய  மார்க்க பிர­சங்­கத்தில் முஸ்­லிம்­களைப் பற்றி தவ­றாக  தெரி­விக்­கப்­பட்­ட­மை­யை­ய­டுத்து அதற்கு  எதிர்ப்பு  தெரி­வித்து முஸ்லிம் இளை­ஞர்கள் பெளத்த  கொடி­களை  எரித்­ததாலேயே இந்த  முறுகல் நிலை உரு­வா­ன­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

இச்­சம்­ப­வத்தில் ஈடு­பட்­ட­தாக  சந்­தே­கத்தின் பேரில் எட்டு  இளை­ஞர்கள் 14 நாட்கள்  விளக்­க­ம­றி­யலில்  வைக்­கப்­பட்­டுள்­ளனர். 

நோன்­மதி  தினத்­தன்று  தோரரின் மார்க்க பிர­சங்­கத்தில்  முஸ்­லிம்­களைப் பற்றி தவ­றான  கருத்­துக்கள் தெரி­விக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து  முஸ்லிம் இளை­ஞர்கள் பெளத்த  கொடி­களை  எரித்­த­தாக இரவு 12 மணிக்கு எச்­ச­ரிக்­கப்­பட்­டனர்.

எரித்த கொடி­க­ளுக்கு  பதி­லாக புதி­தாக கொடி­களை வாங்கித் தரு­மாறு கூறி  பெரும்­பான்மை இனத்­த­வர்கள் சமா­தா­ன­மா­கி­யி­ருக்­கி­றார்கள்.

மறு­தினம் பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த வேறு சிலர்  முஸ்­லிம்­க­ளுக்கு  தகா­த­வார்த்­தைகள் பேசி பொலி­ஸிலும்  முறைப்­பாடு செய்­துள்­ளனர்.  இத­னை­ய­டுத்து சம்பந்­தப்­பட்ட 8 இளை­ஞர்­க­ளையும்  உற­வி­னர்கள் பொலிஸில் ஒப்­ப­டைத்­துள்­ளனர்.

பொலிஸார் அவர்­களை நீதி­மன்றில்  ஆஜர்­ப­டுத்­தி­ய­துடன்  அவர்கள் 14 நாள் விளக்­க­ம­றி­யலில்  வைக்­கப்­பட்­டுள்­ளனர். 

கடந்த  23 ஆம் திகதி  பெரும்­பான்­மை­யின வாலி­பர்­க­ளுக்கும் முஸ்­லிம்­க­ளுக்­கு­மி­டையில் முறுகல் நிலை ஏற்­பட்­டுள்­ளது.  நிலைமை  அமைச்சர் பைசர் முஸ்­த­பா­வினால் ஜனா­தி­ப­திக்கு அறி­விக்­கப்­பட ஜனா­தி­ப­தியின்  உத்­த­ரவின்  பேரிலே  நேற்று  -25- சமா­தானப் பேச்­சு­வார்த்தை  இடம்­பெற்­றது. 

மஹி­யங்­கனை பொலிஸ்   நிலை­யத்தில் உதவிப் பொலிஸ் அத்­தி­யட்­சகர் லிய­ன­கேயின்  தலை­மையில் நடை­பெற்ற  சமா­தானப் பேச்­சு­வார்த்­தையில் மஹி­யங்­கனை பன்­ச­லையில் மார்க்க பிர­சங்கம்  நடாத்­திய தேரர் உட்­பட 8 தேரர்­களும்,  பங்­க­ர­கம்­மன பள்­ளி­வாசல் நிர்­வாக சபை உட்­பட ஊர் பிர­மு­கர்கள் அடங்­கிய  15 பேரும்   கலந்­து­கொண்­டனர். 

இது தொடர்பில் பேச்­சு­வார்த்­தையில் கலந்து கொண்ட  பங்­க­ர­கம்­மன பள்­ளி­வாசல் செய­லாளர்  அலி அக்­பரை தொடர்பு கொண்டு வின­விய போது அவர் பின்­வ­ரு­மாறு  பதி­ல­ளித்தார்.

சமா­தானப் பேச்­சு­வார்த்­தையின் போது நடந்து முடிந்த  சம்­பவம் தொடர்பில்  எதுவும்  பேச வேண்­டா­மென உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர்  இரு­த­ரப்­பையும்  வேண்­டிக்­கொண்டார். மஹி­யங்­கனை பகு­தியில் சமா­தா­னம்  நிலவ வேண்­டு­மெ­னவும், இரு சமூ­கங்­களும் ஒற்­று­மை­யாக வாழ­வேண்­டு­மெ­னவும் வேண்­டிக்­கொண்டார்.

இதன் பின்பு  எதிர்­கா­லத்தில் இவ்­வா­றான  பிரச்­சினை  உரு­வா­கக்­கூ­டாது.  அதற்கு பள்­ளி­வாசல்  நிர்­வாகம் பொறுப்­பாக இருக்­க­வேண்­டு­மெ­னவும்  இதற்­காக குழு­வொன்­றினை நிய­மித்து செயற்­ப­டு­மாறும்  எம்மை அறி­வு­றுத்­தினார். 

ஊரில்  எதிர்­கா­லத்தில் இவ்­வா­றான சம்­ப­வங்கள் ஏற்­ப­டா­தி­ருக்க நாம் ஜமா­அத்தை தெளி­வு­ப­டுத்­த­வுள்ளோம்.  அதற்­காக நிய­மிக்­கப்­படும் கமிட்டி தேவை­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளும் என்றார். 

கடைகள் சிறிது நேரம் பூட்டு 
நேற்று பங்­க­ர­கம்­மன மற்றும் மஹி­யங்­க­னையில் கடை­களைப்  பூட்­டி­விட்டு பெளத்த கொடி  எரிப்­புக்கு எதிர்ப்பைத்  தெரி­விக்­கு­மாறு  போஸ்­டர்கள் ஒட்­டப்­பட்­டி­ருந்­தன.  இதை­ய­டுத்து அங்கு கடைகள்  காலையில் சிறிது நேரம் பூட்­டப்­பட்­டி­ருந்­தன. 

பொலிஸார்  போஸ்­டர்­களை அகற்­றி­ய­துடன் வர்த்­த­கர்கள் கடை­களை திறக்க வேண்டும் என வேண்டிக் கொண்­டனர். இத­னை­ய­டுத்து கடைகள் மீண்டும் திறக்­கப்­பட்­டன. 

பங்­க­ர­கம்­ம­னையில் சுமுக நிலை 
பங்­க­ர­கம்­ம­னயில் சுமுக நிலை நில­வு­வ­தா­கவும்   பொலிஸ்  விஷேட அதி­ர­டிப்­ப­டை­யினர் பாது­காப்பு ரோந்துச் சேவையில்  ஈடு­பட்­டுள்­ள­தா­கவும் பள்­ளி­வாசல் செய­லாளர் அலி  அக்பர் தெரி­வித்தார். இதே­வேளை பங்­க­ர­கம்­மன பகுதியைச் சேர்ந்த மஸ்ஜிதுல் நூர் தக்கியா உறுப்பினர் அபூ ஹனீபா இரவில் மக்கள் அச்சத்துடனே உறங்குவதாகத் தெரிவித்தார். 

1 comment:

  1. அப்போ தாக்கப்பட்ட முஸ்லிம் நபருககு நீதி?

    ReplyDelete

Powered by Blogger.