Header Ads



தெஹி­வளை பள்ளிவாசலுக்கு, பொலிஸாரால் அச்சுறுத்தல்

-விடிவெள்ளி ARA.Fareel-

தெஹி­வளை  பாத்யா  மாவத்­தையில் அமைந்­துள்ள  பள்­ளி­வா­சலின் விஸ்­த­ரிப்­புக்கு பொலிஸாரும்  எச்­ச­ரிக்கை  விடுத்­துள்­ள­துடன் கட்­டிட நிர்­மாணப் பொருட்­களை  அவ்­வி­டத்­தி­லி­ருந்து அகற்­றிக்­கொள்­ளு­மாறும்  பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­துக்கு நேற்று -25-  உத்­த­ர­விட்­டனர்.

தெஹி­வளை பாத்யா மாவத்­தை­யி­லுள்ள பள்­ளி­வா­சலின் விஸ்­த­ரிப்பு  பணி­க­ளுக்கு  அப்­பி­ர­தே­சத்தைச் சேர்ந்த பெளத்த  தேரர்கள் கடந்த  திங்கள் இரவு கடும் எதிர்ப்பு வெளி­யிட்­டனர். பொலிஸ் நிலை­யத்­திலும் முறைப்­பாடு செய்­தனர்.

இத­னை­ய­டுத்து நேற்­று­முன்­தினம் பள்­ளி­வாசல்  நிர்­வா­கி­களை தெஹி­வளை  பொலிஸ்  நிலைய பொறுப்­ப­தி­காரி பொலிஸ் நிலை­யத்­துக்கு அழைத்து விசா­ர­ணை­யொன்­றினை  நடாத்­தினார். 

ஆர்.ஆர்.டி. அமைப்பின் சட்­டத்­த­ர­ணி­களும் விசா­ர­ணையில்  கலந்து கொண்­டனர். விசா­ர­ணையில் பள்­ளி­வாசல் விஸ்­த­ரிப்­புக்கு எதிர்ப்பு வெளி­யிட்ட  தேரர்­களும் கலந்து கொண்­டனர்.

பள்­ளி­வாசல்  விஸ்­த­ரிப்பு பணிகள்  உரிய சட்­ட­ரீ­தி­யான அனு­மதி பெறப்­பட்டே  மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் தெரி­வித்­தனர். அதற்­கான ஆவ­ணங்­களும்  பொலி­ஸா­ரிடம் கைய­ளிக்­கப்­பட்­டன.

ஆனந்த சாகர தேரர் தலை­மை­யி­லான பெளத்த தேரர்கள் தமக்கு அச்­சு­றுத்தல் விடுப்­ப­தா­கவும் முறை­யிட்­டனர்.

இந்­நி­லை­யிலே பள்­ளி­வாசல் நிர்­வாகம்  கட்­டிட நிர்­மாணப் பொருட்­களை  நேற்று கொண்டு வந்து  இறக்கிக் கொண்­டி­ருக்­கையில்  பொலிஸார் அவ்­வி­டத்­துக்கு வந்து கட்­டிட  நிர்­மாணப் பொருட்­களை  அவ்­வி­டத்­தி­லி­ருந்து   அகற்றிக் கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளனர்.

அவ்வாறு  அகற்றிக்கொள்ளாவிட்டால் கட்டிட நிர்மாணப்பணிகளை முழுமையாக  நிறுத்திவிடுவதாகவும் எச்சரித்துள்ளனர்.

5 comments:

  1. Where is Mujibur Rahman????????

    ReplyDelete
  2. Why Muslim Politician not involving in this matter, we need a politician lime CM eastern Mr. Nazaar Ahmed, who can raise the voice against injustices. POLICE HAS NO POWER TO STOP UNLESS OTHERWISE THE ORDER COME FROM A COURT.

    ReplyDelete
  3. Why Muslim Politician not involving in this matter, we need a politician like CM eastern Mr. Nazaar Ahmed, who can raise the voice against injustices. POLICE HAS NO POWER TO STOP UNLESS OTHERWISE THE ORDER COME FROM A COURT.

    ReplyDelete
  4. Don't want to cease the meritorious deeds. Who are these policemen to give the order against the place which deserves to worship the universal God Allah not the stones and soils.

    ReplyDelete

Powered by Blogger.