Header Ads



முதலமைச்சர் படை அதிகாரியை வசைபாடியது - ஜனாதிபதியும், பிரதமரும் மௌனம் சாதிப்பதேன்?


கிழக்கு மாகாண முதலமைச்சர், இராணுவ அதிகாரியொருவரை வசைபாடிய சம்பவமொன்று தொடர்பாக நாட்டினுள் பல்வேறுபட்ட கருத்துக்கள் வெளிவந்த வண்ணமுள்ளன.

இது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் மௌனம்சாதிப்பதேன் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திசாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கொலன்னாவை மற்றும் கடுவெளை ஆகிய பிரதேசங்களில் மக்களின் வீடுகள் மற்றும் கிணறுகளை சுத்திகரிக்கும் விசேட சிரமதானம் ஒன்றில் கலந்து கொண்டபோதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்படி கேள்வியை எழுப்பியுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் ‘ரத்து தருவ’ நிவாரண வேலைத்திட்டத்தின் கீழ் இன்று மற்றும் நாளைய தினங்களில் இந்த சுத்திகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது.

3 comments:

  1. நீங்க பாடாத வசயா?

    ReplyDelete
  2. JVP meant
    the party which always blaming the pros and cons of others. ...

    This is not good

    ReplyDelete

Powered by Blogger.