Header Ads



முக்கிய புலி, கட்டுநாயக்காவில் கைது

விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் எனக் கூறப்படும் ஆதவன் மாஸ்டர் என்ற அய்யாத்துரை மோகன்தாஸ் என்பவரை பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் இந்தியாவுக்கு புறப்பட்டுச் செல்ல தயாரான நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத விசாரணைப் பிரினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி பகுதியில் உள்ள வீடொன்றில் தற்கொலை அங்கி உட்பட வெடிப் பொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் இவர் எனவும் சம்பவத்துடன் தொடர்புடைய அணியை இவரே வழி நடத்தியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது என பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கூறியுள்ளனர்.

சாவகச்சேரி குண்டு மீட்பு சம்பவம் தொடர்பில் விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கிய தலைவர்கள் உட்பட 20 முன்னாள் புலிப் போராளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.