Header Ads



"யானை விளாம்பழத்தை உட்கொள்ளும்போது, ஓட்டை அப்படியே வைத்து பழத்தை சாப்பிடும்"


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கவே தாம் கூட்டு எதிர்ககட்சியுடன் தொடர்பு பேணுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

உடுகம்பொல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் நேற்று -22- அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

யானை விளாம்பழத்தை உட்கொள்ளும் போது ஓட்டை அப்படியே வைத்து பழத்தை சாப்பிடும். அதேபோன்று நிலைமை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஏற்பட்டுள்ளது.

தற்போது கட்சிக்குள் எதுவுமில்லை. சுதந்திரக் கட்சியை வலுவடையச் செய்ய ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிக்கச் செய்ய நாம் எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கின்றோம்.

தற்போது நான் எந்த நாளும் ஊடகங்களில் வருகின்றேன். அது நான் சொல்லிப் போடப்படுபவை அல்ல. தற்போதைய ஜனாதிபதி எங்கு சென்றாலும் மஹிந்த ராஜபக்சவை பற்றிதான் பேசுகின்றார்.

பாடசாலையில் மாணவர்களுக்கு இடையில் நடக்கும் சண்டையைப் போன்று செயற்படுவது பொருத்தமாகாது என மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. அதுபோலத்தான் நீங்கள் நாட்டையே கொள்ளை அடித்ததையும் கூறவேண்டும்!

    ReplyDelete
  2. முதலில் நீங்கள் நாட்டின் தலைவர் என்ற வகையில் ஒவ்வொரு நாலும் பத்திரிகையில் வந்தீர்கள் இப்போது நாடியில் முதாவது திருடன் என்ற காரணத்தால் தினசரி பத்திரிகையில் வருகிறீர்கள். அதனால் தற்போதைய ஆட்சியாளர்களும் கவனமாக இருக்க வேண்டும்.இல்லை என்றால அவர்களின் பெயரும் வரும் காலத்தில் வலம் வரும்.

    ReplyDelete

Powered by Blogger.