"வசீம் தாஜூடீனின் கொலை தொடர்புடைய, மஹிந்தவின் சந்ததிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்"
பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் கொலையுடன் தொடர்புடைய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சந்ததியினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தாஜூடீனின் கொலை தொடர்பிலான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் காவல்துறை மா அதிபர் ஒருவர் மற்றும் மஹிந்தவின் சந்ததியினர் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய சட்ட மா அதிபர் புதிய காவல்துறை மா அதிபர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய திசை நோக்கியப் பயணம் ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு வாய்ந்த காவல்துறை மா அதிபரும், பொறுப்பு வாய்ந்த சட்ட மா அதிபரும் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment