கூட்டு எதிர்க்கட்சியை நீக்கினால், நல்லாட்சியையும் நீக்கவேண்டும்
நல்லாட்சி என்ற பெயர் நீக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க கோரியுள்ளார்.
இந்த அரசாங்கத்திற்கு வழங்கப்படும் நல்லாட்சி என்ற அடைமொழி நீக்கப்பட வேண்டுமென அவர் இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சி என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது என ஊடக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சி என்ற பெயர் தொடர்பில் சர்ச்சை இருந்தால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், அதுவரையில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் கூட்டு எதிர்க்கட்சி என்ற பெயர் பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஊடக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை பற்றி தமக்கு அறிவிக்கப்படவில்லை என ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
Post a Comment