Header Ads



கிருலப்பனை மேதினக் கூட்டத்தில், கலந்து கொள்வோருக்கான 10 எச்சரிக்கைகள்...!


நன்றி – L E N

-தமிழில் - ஹேனேகெதர பழீல்-

01. நீங்கள் கிருலப்பனைக்குச் சென்றால் தவறுதலாகவேனும் உங்கள் மனைவியை அங்கு அழைத்துச் செல்ல வேண்டாம்.
காரணம் - தங்கல்ல தவிசாளரும் அங்கு வரக் கூடிய சாத்தியம் காணப்படுவதால் மனைவியோடு அங்கு செல்வதால் கணவனது உயிர் பறிபோகவும், மனைவியின் பத்தினித் தன்மை பறிபோகவும் வாய்ப்பு உண்டு.

02. நீங்கள் கிருலப்பனைக்குச் சென்றாலும், உங்கள் பெண் பிள்ளைகளை அங்கு அழைத்துச் செல்ல வேண்டாம்.
காரணம் - சாருவா சுனிலும் அங்கு வருகை தருவதனால், அவரது அடுத்த சதத்தைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக உங்களது பெண் பிள்ளைகளைப் பயன்படுத்திக் கொள்ள முனையலாம்.

03. நீங்கள் கிருலப்பனைக் கூட்டத்திற்கான பாதுகாப்புக்காகச் செல்லும் பொலிஸ் அதிகாரியாயின் கற்கள் மூலமான தாக்குதல்களிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள்.
காரணம் - டீ.வீ. உபுல் அங்கு வருகை தருவார்.

04. நீங்கள் கிருலப்பனைக்குச் சென்றாலும், உங்களது தங்க ஆபரணங்களை வீட்டிலே வைத்து விட்டுச் செல்லுங்கள்.
காரணம் - 'ரத்தரங்' என அழைக்கப்படும் ரோஹித்த அபேகுணவர்தனவும் அங்கு வருகை தருவார்.

05. நீங்கள் கிருலப்பனைக்குச் சென்றாலும், சிறிய பிள்ளைகளை அங்கு அழைத்துச் செல்ல வேண்டாம்.
காரணம் - (தூஷன வார்த்தைகள் பேசும்) வாசுதேவ அங்கு வருகை தரவுள்ளார்.

06. நீங்கள் கிருலப்பனைக்குச் சென்றாலும், விளையாடித் திரியும் வயதுடைய சிறு பிள்ளைகளை அங்கு அழைத்துச் செல்ல வேண்டாம்.
காரணம் - விளையாட்டுத் துப்பாக்கியுடைய நகராதிபதி (ஹம்பாந்தோட்டை நகராதிபதி) அங்கு வரக் கூடிய சாத்தியம் காணப்படுவதால், அவர் உங்கள் பிள்ளைகளை துப்பாக்கி விளையாட்டுக்களில் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

07. நீங்கள் கிருலப்பனைக் கூட்டத்தை அறிக்கையிடச் செல்லும் ஓர் ஊடகவியலாளர் ஆயின் இறுதி விருப்புப் பத்திரத்தில் கையெழுத்து இட்டு விட்டுச் செல்லுங்கள்.
காரணம் - கோட்டபாய ராஜபக்ஷ வெள்ளை வான் ஒன்றில் வரும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

08. நீங்கள் கிருலப்பனை செல்வதாயின் உங்களது கடவுச்சீட்டை வீட்டில் வைத்து விட்டுச் செல்லுங்கள்.
காரணம் - விமல் வீரவங்ச அங்கு வருகை தரவுள்ளார்.

09. கிருலப்பனைக்குச் செல்லும் அனைவரும் தத்தமது பாதுகாப்பைத் தாமே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
காரணம் - ஜூலம்பிடிய அமரே அங்கு வரும் சாத்தியம் இருப்பதால் யாரும் உங்களது பாதுகாப்பு குறித்துக் கவனஞ் செலுத்தும் சந்தர்ப்பம் இல்லாமல் போகலாம்.

10. கிருலப்பனை செல்லும் அனைத்துத் தொழிலாளர்களும் திடீரென மேற்கொள்ளப்படும் பன்ச் தாக்குதலுக்குத் (குத்துத் தாக்குதல்) தயாராயிருக்க வேண்டும்.
காரணம் - மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அங்கு வருகை தரவுள்ளார்.

2 comments:

  1. Saruwa Sunil is organizing crowd for Maithri. Do not go to Galee Then.

    ReplyDelete
  2. Why this government did not take any action against these criminals?

    ReplyDelete

Powered by Blogger.