Header Ads



மகிந்தவை கைவிடுகிறதா சீனா..? மைத்திரியுடன் இணைந்து செயற்பட விருப்பம்..!

இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட சீனா விரும்புவதாக அந்நாட்டு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவை முன்னேற்ற சீனா விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவும் இலங்கையில் நீண்ட உறவு வரலாற்றைக் கொண்டுள்ளன.

இந்தநிலையில் இரண்டு நாடுகளும் நன்மை பெறும் வகையில் உறவு மேம்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

1 comment:

  1. இவர் தவணை முறையில் துவேஷத்தை கக்கி ஆட்சியைப்பிடிக்கும் வரை (அது நடக்கப்போவதும் கிடையாது) காத்திருப்பதற்கு சீனர்கள் ஒன்று முட்டாள்களில்லை!

    ReplyDelete

Powered by Blogger.