Header Ads



பழைய மாணவர் சந்திப்பின்போது, 2 பிள்ளைகளின் தந்தை சுட்டுக்கொலை

நாத்தாண்டி – மாவில பகுதியில் நடைபெற்ற விருந்துபசாரத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு (03) இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாத்தாண்டி – மாவில பகுதியிலுள்ள விழா மண்டபம் ஒன்றில், பிரபல பாடசாலையொன்றின் பழைய மாணவர் சந்திப்பு இடம்பெற்றுக் கொண்டிருக்கையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றியதில் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் 2 பிள்ளைகளின் தந்தையான 39 வயதுடைய சுசந்த குருகுலசூரிய உயிரிழந்துள்ளார்.

வர்த்தகரான இவர் அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களில் ஒருவரான எச்.ஏ.கே.ஆசிரி என்பவருக்கும் கொலை செய்யப்பட்டவருக்கும் இடையே தனிப்பட்ட பகை இருந்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரே பாடசாலையின் பழைய மாணவர்களான இவர்கள், சில காலம் நெருக்கமாக பழகியிருந்தமையும் தெரிவந்துள்ளது.

சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டிருந்தாகவும் பொலிஸார் கூறினர்.

No comments

Powered by Blogger.