Header Ads



மேல் மாகாண சபைக்கு சகாவுல்லா தெரிவு, நீர்கொழும்பு பிரதி மேயராக தயான் லான்சா

நீர்கொழும்பு மாநகர சபையின் பிரதிமேயராக அமைச்சர் நிமால் லான்சாவின் சகோதரர் தயான் லான்சா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலிலும் லான்சா குடும்பம் மஹிந்த தரப்புடன் இணைந்து பணியாற்றியிருந்தது.

எனினும் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி மைத்திரியின் தலையீட்டின் பேரில் நிமால் லான்சாவுக்கு அமைச்சுப் பதவி கிடைத்துள்ளது.

இந்நிலையில் நீர்கொழும்பு மாநகர சபையின் பிரதிமேயர் சகாவுல்லா மாகாண சபைக்கு தெரிவானதையடுத்து அந்த இடத்துக்கு நிமால் லான்சாவின் இளைய சகோதரர் தயான் லான்சா நியமிக்கப்பட்டுள்ளார்.

அனுபவத்திலும், வயதிலும் மிகவும் இளையவரான அவரது நியமனம் சுதந்திரக்கட்சியின் மூத்த உறுப்பினர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

No comments

Powered by Blogger.