இலங்கையர்களுக்கு பயண, எச்சரிக்கை இல்லை...!
தீவிரவாத அச்சுறுத்தல்கள் காரணமாக இலங்கைப் பிரஜைகளை பிற நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என எந்தவொரு பயண எச்சரிக்கையும் விடுக்கப் போவதில்லை என, வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இது குறித்து வௌிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு இன்று கருத்து வௌியிட்டுள்ள அமைச்சின் அதிகாரி, அண்மையில் தீவிரவாதிகளால் பாரிஸ் மற்றும் மாலி போன்ற நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கைப் பிரஜைகளுக்கு விடுமுறைக் காலங்களில் எந்தவொரு நாட்டுக்கும் பயணங்களை மேற்கொள்ளக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப் போவதில்லை எனவும் இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக தமது நாட்டு பிரஜைகளுக்கு நேற்றையதினம் அமெரிக்கா உலக அளவில் பயண எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இலங்கை வெளிவிவகார அமைச்சின் இந்தக் கருத்து வௌியாகியுள்ளது.
இது குறித்து வௌிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு இன்று கருத்து வௌியிட்டுள்ள அமைச்சின் அதிகாரி, அண்மையில் தீவிரவாதிகளால் பாரிஸ் மற்றும் மாலி போன்ற நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கைப் பிரஜைகளுக்கு விடுமுறைக் காலங்களில் எந்தவொரு நாட்டுக்கும் பயணங்களை மேற்கொள்ளக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப் போவதில்லை எனவும் இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக தமது நாட்டு பிரஜைகளுக்கு நேற்றையதினம் அமெரிக்கா உலக அளவில் பயண எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இலங்கை வெளிவிவகார அமைச்சின் இந்தக் கருத்து வௌியாகியுள்ளது.
Post a Comment