Header Ads



"இந்தியாவை பற்றி குறைத்து பேசுபவர்கள், கொலை செய்யப்படுபவார்கள்''

மதசகிப்பின்மை விவகாரத்தில் நாட்டில் என்ன நடக்குதுனே தெரியவில்லை. அமீர்கான் கருத்து தெரிவித்தாலும்  தெரிவித்தார்... ஆளாளுக்கு வரிஞ்சு கட்டிட்டு களம் இறங்கிட்டாங்க.  மும்பையில் அமீர்கானுக்கு எதிராக சிவசேனா தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. அமீரின் வீட்டு  முன்பு முற்றுகையிலும் ஈடுபட்டது.

தொடர் போராட்டங்களின் விளைவாக மும்பையில் உள்ள அமீர்கான் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அமீர்கானின் மனைவி கிரண், குழந்தைகள் பாதுகாப்பு கருதி மும்பையில் இருந்து வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தனது கருத்தில் உறுதியாகவுள்ள அமீர்கான், மகத்தான இந்தியனான எனக்கு, ''எனது தாய் நாட்டை விட்டு வெளியேறும் எண்ணமில்லை '' என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டார். 

எனினும் நாடு முழுவதும் அமீர்கானின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.  எந்த விஷயத்திலும் அதிரடியை காட்டும் சிவசேனா, இந்த விஷயத்திலும் சும்மா இருக்குமா? லூதியானாவில் அமீர்கானுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பேசிய, பஞ்சாப் மாநில சிவசேனாத் தலைவர்  ராஜிவ் தாண்டன், அமீர்கானை கன்னத்தில் அறைந்தால், அவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசளிக்கப்படும் என்று கொளுத்தி போட்டார். அதிரடிக்கு பஞ்சமில்லாத சிவசேனாவினர், அமீர்கானின் விஷயத்தில் இப்படிதான் நடப்பார்கள் என்பது  எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.

சிவசேனா இப்படியென்றால் அதனுடன் ரத்ததொடர்புள்ள மகாராஷ்ட்ர நவநிர்மான் சேனாத் தலைவர் ராஜ் தாக்கரேவோ, ஒரு படி மேலே போய், '' இந்த தேசம் பாதுகாப்பற்றது, சகிப்பின்மை இல்லாதது என்று யாராவது கூறினால் அவர்களை கொலை செய்வேன். அது ஷாருக்கான், அமீர்கான், சல்மான்கான் அல்லது செங்கிஸ்கானாக இருந்தாலும் சரி... அதை பற்றி நான் கவலைப்படப் போவதில்லை. இந்தியாவை பற்றி குறைத்து பேசுபவர்கள் கொலை செய்யப்படுபவார்கள்'' என்று பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். 

ராஜ்தாக்கரேவின் இந்த பேச்சுக்கு பதிலடியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், சிவசேனாத் தலைவர் உத்தவ் தாக்கரேவை கன்னத்தில் அறைந்தால் 2 லட்ச ரூபாய் பரிசளிக்கவுள்ளதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த அமைப்பின்  தலைவர் அல்தாப்போ, ''வன்முறையான பேச்சுக்கு அவர்கள் வழியில் சென்றுதான் பதிலளிக்க வேண்டும். வன்முறையான வார்த்தைகளை மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள். ஒருவரை அடிக்க ஒரு லட்சம் என்றால், உன்னை அடிக்க 2 லட்சம் என்று அறிவித்தால்தான் அதன் வலி தெரியும்'' என்கிறார். 

மொத்தத்துல.. கன்னத்துல அறையுற போட்டி நடத்துறாங்களோனுதான் தோணுது!

3 comments:

  1. தற்பொழுது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் சிவசேனா, பயங்கரவாதிகளின் வன்முறைப் போக்கின் பின்னால் பாரிய நுண் அரசியல் முகிழ்ந்து உள்ளது. இந்தியா பாகிஸ்தான் நல்லுறவை சீர்குலைக்க சியோனிஸ ஏகாதியபத்திய சக்திகள் சிவசேனாவை கைப்பாவையாக பயன்படுத்தி வருவதாகவே தெரிகிறது. பாகிஸ்தான் இந்தியா எப்போதுமே எதிரிகளாகத்தான் இருக்க வேண்டும் என்பது ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளின் திட்டம். அவர்களின் திட்டத்திற்கு சிவசேனாவும் ஆர்.எஸ்.எஸும் பாரிய உதவிகளை செய்து வருகிறது.
    இரண்டு நாடுகளும் நட்பு கொண்டால் ஆசிய பிராந்தியத்தில் மிகப்பெரிய வல்லரசாக இந்தியா மாறக் கூடும்.இதனையே குறிக்கோளாகக் கொண்டு இந்திய முஸ்லிம்களை தாக்குவதன் மூலம் பாக்கிஸ்தானை கடுப்பேற்றலாம் என்றே நினைகிறார்கள்
    மாட்டிரைச்சியை வைத்து அரசியல் நடத்தி வருகிறார்கள். நெற்றிபொட்டு மாத்திரம் கருஞ்சிவப்பில் கண்ணைவிடப்பெரிதாக இருக்கும்.ஆனால் மனித இரத்தம் என்ன கலரென்றே தெரியாத இரத்தக் காட்டேரிகளே இவர்கள் நடமாடும் மனிதப்பிணங்களாக முஸ்லிம்களை தாக்குகிறார்கள்.
    யா அல்லாஹ் இவர்களின் சூழ்ச்சிகளை தவிடுபொடியாக்கி இந்திய முஸ்லிம்களை பாதுகாப்பாயாக

    ReplyDelete
  2. ராஜித் தாண்டனை எங்கிருந்தாலும் கொல்லவேண்டும்

    ReplyDelete
  3. 'பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்' என்று பாரதி கூறியது இதைதத்தான் போலிருக்கின்றது.

    இப்படி எல்லோருமே வன்முறையில் இறங்கினால் இந்தியாவில் எலும்புக்கூடுகள் மாத்திரமே எஞ்சியிருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.