Header Ads



ஆயுதமேந்துவோம் என எச்சரிக்கை விடுத்த கம்மன்பில - பதிலடி கொடுத்த ரணில் (வீடியோ)

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பிவித்துரு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான உதய கம்மன்பில பாராளுமன்றில் ஆற்றிய உரைக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.முதல்  உரையில் கம்மன்பில, நாட்டை பிளவடையச் செய்தல் மற்றும் ஆயுதம் ஏந்துதல் போன்ற வசனங்களை உள்ளடக்கிப் பேசியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த உரையை இடை மறித்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒழுங்கு கேள்வி ஒன்றை சபாநாயகர் முன்னிலையில் எழுப்பியுள்ளார். ஆயுதம் ஏந்துதல் பற்றி பேசுவது பாராளுமன்ற நிலையியன் கட்டளைகளுக்கு விரோதமானது என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து உதய கம்மன்பில உரையை நிறுத்திக்கொள்ள நேரிட்டுள்ளது.இதேவேளை, குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவை உதய கம்மன்பில தனது உரையில் பாராட்டிப் பேசியிருந்தார்.


1 comment:

  1. Useless fellows went to parliment.jelous recism guy.westing time in parliment

    ReplyDelete

Powered by Blogger.