Header Ads



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் புதிய தெரிவுகள்..!

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்பட வேண்டும், என்று கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் முதலாவது கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய நாடாளுமன்றக் குழுவின் முதலாவது கூட்டம் நேற்று இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்றக் குழுவின் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

அத்துடன் இரா.சம்பந்தனே எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அத்துடன் குழுக்களின் பிரதித் தலைவர் பதவியை செல்வம் அடைக்கலநாதன் ஏற்றுக் கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கொரடாவாக தர்மலிங்கம் சித்தார்த்தனும், நாடாளுமன்றக் குழுவின் செயலாளராக சிவஞானம் சிறீதரனும், கட்சி பேச்சாளராக எம்.ஏ. சுமந்திரனும் இந்தக் கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டனர்.

No comments

Powered by Blogger.