UNP க்கு 69 வயது - பிரதம அதீதி மைத்திரி
ஐக்கிய தேசியக் கட்சியின் 69வது வருட நிறைவு வைபவங்கள் எதிர்வரும் 06ம் திகதி கட்சி தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் நடைபெறவுள்ளது.
இதனையொட்டி பெரும் கோலாகலமான வைபவங்களை ஐக்கிய தேசியக்கட்சி முக்கியஸ்தர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த வைபவங்களின் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பவற்றின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன கலந்து கொள்ளவுள்ளார். இத்தகவலை ஐ.தே.க. பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
குறித்த வைபவத்தின் போது கட்சியின் எதிர்கால செயற்திட்டங்கள், அரசாங்கத்தின் கொள்கை முன்னெடுப்புகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல், தேசிய அரசாங்கம் என்பன குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.
ஐ.தே.க. வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் இந்த வைபவத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.
Post a Comment