Header Ads



எதிர்க்கட்சித் தலைவர் பதவியை, SLFP கைபற்றுவது ஜனநாயகப் பிறழ்வாக கருதப்படும்

நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வழங்கப்பட வேண்டும் என்று ஜே.வி.பி. யும் வலியுறுத்தியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது அரசாங்கத்துக்கு வெளியே கூடுதலான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் கட்சிக்கு வழங்கப்படுவதே ஜனநாயக அரசியல் மரபாகும் என்றும் ஜே.வி.பி. கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பாக பி.பி.சி. யின் சந்தேசய சிங்கள ஒலிபரப்புக்கு ஜே..வி.பி. யின் ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தி செவ்வியொன்றை வழங்கியுள்ளார்.

அதில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள கலப்பத்தி,

எங்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் கருத்தியல் ரீதியாக ஆயிரம் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அவர்களும் இந்நாட்டின் பிரசைகளே.

எங்களது கட்சிக்கு ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளனர். அந்த வகையில் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும்.

அதற்குப் பதிலாக தேசிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளையும் பெற்றுக் கொண்டு, எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் கைப்பற்றிக் கொள்ள சுதந்திரக் கட்சி முயற்சி செய்தால் அது ஒரு ஜனநாயகப் பிறழ்வாகவே கருத நேரிடும் என்றும் நிஹால் கலப்பத்தி தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. People voted in a new government to catch thieves. However, both the UNP and the SLFP have come to an agreement to peacefully conceal fraud, corruption and thieving while engaged in an operation to release the thieves. My3 and Ranil are fooling the entire Nation.

    ReplyDelete

Powered by Blogger.