பாராளுமன்றத்தை ஒரே அரசாங்கமாக மாற்ற மகிந்த, சந்திரிக்கா விருப்பம் - ரணில்
நாடாளுமன்றத்தை ஒரே அரசாங்கமாக மாற்றுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விருப்பம் வெளியிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகர கட்டிட நிர்மாண கண்காணிப்பு விஜயத்தில் கலந்துகொண்டிருந்த போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கோ வேறு எந்தவொரு கட்சிக்கோ பெரும்பான்மை ஆசனம் கிடைக்கவில்லை. இந்த தருணத்திலேயே தேசிய அரசாங்கத்திற்காக வழி அமைக்கப்பட்டது.
எனவே, பிரதான கட்சிகள் இணைந்து செயற்படவேண்டும் என ஜனாதிபதியும், தானும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்கவும் கலந்துரையாடினோம்.
தேர்தலுக்கு முன்னர் முழு நாடாளுமன்றத்தையும் தேசிய அரசாங்கமாக மாற்றுவது தொடர்பாக பரிந்துரைத்திருந்தேன்.
அந்த யோசனைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் எதிர்ப்பை வெளியிடப் போவதில்லை என தெரிவித்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
Post a Comment