இனிப்புப் பண்டங்களில், ரசாயன வர்ணம்
வர்த்தக நிலையங்களில் விநியோகிக்கப்படும் இனிப்புப் பண்டங்களில் ஆடைத் தொழில்சாலையில் பயன்படுத்தப்படும் வர்ணம் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
குறிப்பாக கொழும்பு நகர எல்லைக்குள் வர்த்தக நிலையங்களில் விநியோகிக்கப்படும் இனிப்புப் பண்டங்களில் இந்த ரசாயன வர்ணம் பயன்படுத்தப்படுகிறது.
கொழும்பு மாநகரசபையின் மருத்துவ பிரிவின் பிரதான உணவு பரிசோதகர் எம்.பி.லால்குமார இந்த தகவலை வெளியிட்டார்.
இந்தநிலையில், இன்று தொடக்கம் வர்த்தக நிலையங்களில் விநியோகிக்கப்படும் இனிப்புப் பண்டங்களை விசேட பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Post a Comment