Header Ads



தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்கு சீனா, நிதி உதவி வழங்கவில்லை - மஹிந்த

பாராளும்றத் தேர்தல்பிரச்சாரப் பணிகளுக்கு சீனா நிதி உதவி வழங்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு இவ்வாறு நிதி உதவிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பல்வேறு நிறுவனங்களின் ஊடாக ஐக்கிய தேசியக் கட்சி நிதி உதவிகளை பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தமக்கு பணம் வழங்குமாறு சீனாவிடம் கோருமாறு அவர் வானொலி ஊடகமொன்றிடம் நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு தரப்புடனும் இரகசிய தொடர்புகளைப் பேணவில்லை எனவும் வெளிப்படையாகவே தாம் தொடர்புகளைப் பேணியதாகத் தெரிவித்துள்ளார்.

தாம் ஜனநாயகத்திற்காக தொடர்ந்தும் போராடி வருவதாகவும் மேற்குலக நாடுகள் தமக்கு ஜனநாயகம் பற்றி கற்பிக்க வேண்டிய அவசியம் கியைடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் தமக்கு வாக்குகள் கிடைக்காத காரணத்தினால் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியைத் தழுவியதாகத் தெரிவித்துள்ளார்.

வடக்கு மக்கள் தமக்கு வாக்களிக்க மாட்டார்கள் எனத் தெரிந்தும், வட மாகாணசபையை நிறுவி தேர்தல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தேவையான அரசியல் தீர்வினை ஆகஸ்ட் மாதம் 17ம் திகதியின் பின்னர் நிறுவும் தமது அரசாங்கம் வழங்கும் என அவர் உறுதியளித்துள்ளார்.

No comments

Powered by Blogger.