திருடர்களை பிடிக்கும் அமைச்சு, எனக்கு கிடைத்தால் மகிழ்சியுடன் ஏற்றுகொள்வேன் - ரஞ்சன்
புதிய அரசாங்கத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் 17, 20 கோடி செலவு செய்த வேட்பாளர்களுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றமை குறித்து நான் மிகவும் மகிழ்சியடைகின்றேன்.
ஏனைய வேட்பாளர்கள் பல கோடிகளை செலவிடும் போது நான் தேர்தல் நடவடிக்கைகளுக்காக மூன்று கோடி என்ற சிறிய அளவலான பணத்தினையே செலவிட்டேன்.
அவ்வாறான சூழ்நிலையிலும் திவுலபிட்டிய மக்கள் எனக்கு 2 லட்சத்து 16 ஆயிரம் என்ற பெரிய அளவிலான வாக்குகளை அளித்துள்ளனர்.
எனக்கு இந்த அளவிற்கு ஆதரவு வழங்கிய மக்களுக்காக சேவை செய்ய கூடிய ஒரு அமைச்சு பதவியை நான் எதிர்பார்க்கின்றேன். திருடர்களை பிடிக்கும் அமைச்சு ஒன்று கிடைத்தால் அது மிகவும் சிறப்பாக இருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நல்ல விடயம். கள்வர்கள் பிடிக்கப்பட்டாள் பார்ளிமேண்டில் யாரும் இருக்க மாட்டார்கள் அல்லவா?
ReplyDelete