அமைச்சர்களின் எண்ணிகையை அதிகரிக்க, பாராளுமன்றத்தின் அனுமதி அவசியம் - ரணில்
அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளும் நாடாளுமன்றத்தின் அனுமதியின் கீழேயே இடம்பெறுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று மாலை கொழும்பு நகர நிர்மாண பணிகளை பார்வையிடுவதற்கான கண்காணிப்பு பயணத்தின் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
இதன்போது, பிரதமர் கொழும்பு கோட்டையை அண்மித்த வீதிகளில் பயணித்ததுடன், கட்டிடங்களின் தன்மை மற்றும் கட்டுமாணங்கள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தேசிய அரசாங்கத்தினுள் அமைச்சர்களின் எண்ணிகையை அதிகரித்துக்கொள்வதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதி அவசியம் என தெரிவித்தார்.
இது தொடர்பான யோசனையை செப்டெம்ர் 3 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை. புராதன பொருட்களுக்கு பாதிப்பு ஏற்படும் வண்ணம் முன்னெடுக்கப்படும் அனைத்து கட்டுமாண நடவடிக்கைகளையும் கைவிடுமாறு பிரதமர் இன்று உத்தரவிட்டுள்ளார்.
ALL M P LIKE THIS MINISTER NOT ANY MP AGAINS HON.RANIL GOOD IDEA NOW SRILANKA ALL MP LIKE MINITER POST
ReplyDelete