Header Ads



தேசிய அரசாங்கம் தொடர்பில், இன்று இறுதி பேச்சுவார்த்தை

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியன இணைந்து அமைக்கவுள்ள தேசிய அரசாங்கம் தொடர்பில் இறுதி பேச்சுவார்த்தை இ்ன்று நடைபெறுகிறது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த துமிந்த திஸாநாயக்க ;

    தேசிய ,அரசாங்கம் அதே போன்று இணக்கப்பாட்டு அரசாங்கம் என்பன பெயருக்காக மாத்திர அமையாது என நான் எதிர்பார்க்கின்றேன். நாட்டு மக்களுக்காக உண்மையிலயே வரலாற்றில் என்றும் அமையாதவாறு இரண்டு கட்சிகளும் இணைந்து செயற்படவுள்ளது. அத்துடன் ஏனைய கட்சிகளை இணைத்துக் கொண்டும் நாட்டை முன்னோக்கி அபிவிருத்தி பாதையில் இட்டு செல்லவும் நடவடிக்கை எடுக்கப்படும். அதே போன்று சர்வதேச நாடுகளின் அழுத்தங்களில் இருந்து நாட்டை காப்பாற்றவும் நாட்டின் எதிர்கால சந்ததியினரை எமது கட்சியில் எவ்வாறு இணைத்து கொள்வது என்பது தொடர்பிலும் கலந்துரையாடி உள்ளோம்.

No comments

Powered by Blogger.