Header Ads



லொகு சீயா என்ற நியாஸின் கொலையுடன், முன்னாள் அமைச்சருக்கு தொடர்பு

ராகமை பிரதேசத்தின் பிரபல மாந்திரீகரான லொகு சீயா என அழைக்கப்படும் எம்.எஸ்.எம். நியாஸின் கொலையுடன் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கும் இராணுவ அதிகாரி ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக அவரது மகன் முறைப்பாடு செய்துள்ளார்.

பாரிய மோசடிகள், ஊழல்கள், பதவி துஸ்பிரயோகங்கள் மற்றும் முறையற்ற அரச வளங்களின் பாவனை தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவிலேயே குறித்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சூட்டி சீயா என்று அழைக்கப்படும் எம்.என்.எம். ஹிஜாஸ் எனும் குறித்த முறைப்பாட்டாளர், அரச சொத்து பயன்படுத்தப்பட்டே தனது தந்தை கடத்தப்பட்டு கொல்லப்பட்டதாக தனக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக அம்முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த முறைப்பாடு தொடர்பில் ஏற்கனவே சிஐடியினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


2 comments:

  1. Chooti seeya va illai loku seeya va? Avar iru per kondum alaikkapaduhirara?
    Maandireeharhalukku islathil enna pangu endu anaivarum arindathe

    ReplyDelete
  2. சகோதரர் VOICE SRILANKA அவர்களே மனித கொலை என்ற வகையில் கண்டிக்கப்பட வேண்டும்.இதில் ஜோக் என்ன வென்றான் மாந்திரிகம் பிழைத்து போய்விட்டதுபோல.உடம்பு வலிக்காமல் சம்பாரிக்க ஒரே வழி ஜின் ,மாந்திரிகம் ,போன்ற வழிகேட்டு தொழில்கள்தான்.பெயர் இஸ்லாமிய பேர் வேலைகள் எல்லாம் ஷிர்க் குடைய வேலை.பிரபல என்று போடப்பட்டுள்ளது நாம் இவரின் மாந்துரீகம் சம்மந்தமாக எந்த பத்திரிகைகளிலும் படிக்க கிடைக்க வில்லை.பக்கட்டும் சூட்டி சியாவுக்கு நாம் ஒன்றை jaffnamuslim மூலம் தெரிவிக்கிறோம் தங்களின் தகப்பன் சித்த அதே ஷிர்க்கான வேலையை தயவு செய்து நீங்களும் செய்யாதீர்கள் உங்களின் தகப்பனின் பாவங்களை அல்லாஹ் மன்னித்தருளுவானாக அமீன்

    ReplyDelete

Powered by Blogger.