Header Ads



முஸ்­லிம்கள் நாட்­டுக்கு விரோ­த­மாக செயற்­ப­டக்­கூ­டாது - மஹிந்த ராஜ­பக்ஷ

எனது ஆட்சிக் காலத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக ஒரு சில தவ­றுகள் இடம்­பெற்­றுள்­ளதை நான் ஏற்றுக் கொள்­கிறேன். அது நான் செய்த தவ­று­க­ளல்ல. எனது பெயரைக் கூறி இடம்­பெற்ற தவ­றுகள்.  அவ்­வா­றான தவ­று­க­ளுக்கு எதிர்­கா­லத்தில் ஒரு போதும் இட­ம­ளிக்­க­மாட்டேன் என உறு­தி­ய­ளிக்­கிறேன்.

இந்­நாட்டில் முஸ்­லிம்­க­ளையும் ஏனைய சமூ­கத்­தி­னரைப் போல் தலை­நி­மிர்ந்து வாழ­வழி சமைப்­பதே எனது இலக்­காகும் என முன்னாள் ஜனா­தி­ப­தியும் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் குரு­ணாகல் மாவட்ட வேட்­பா­ள­ரு­மான மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

மஹிந்த ராஜ­பக்ஷ குரு­ணாகல் மாவட்ட முஸ்லிம் சமூ­கத்தை  குரு­ணாகல் வில்­கொ­டவில் சந்­தித்தார். குரு­ணாகல் மாந­கர சபை உறுப்­பி­னரும் ஸ்ரீ  லங்கா சுதந்­திரக் கட்­சியின் அமைப்­பா­ள­ரு­மான அப்துல் சத்­தாரின் தலை­மையில் நடை­பெற்ற குறிப்­பிட்ட கூட்­டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்­து­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்­து­கையில் தெரி­வித்­த­தா­வது;

‘முஸ்­லிம்கள் எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் சிந்­தித்து செயற்­பட வேண்டும். நாட்­டுக்கு விரோ­த­மாக செயற்­ப­டக்­கூ­டாது. ஐக்­கிய தேசியக் கட்சி இப்­போது பொய்ப் பிர­சா­ரங்­களைச் செய்து வரு­கி­றது.

இன­வாதக் கருத்­துக்­களைப் பரப்பி வரு­கி­றது. முஸ்­லிம்­களின் விரோதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே. நானல்ல, சர்­வ­தேச முஸ்­லிம்­க­ளி­னதும் எதி­ரி­யான அமெ­ரிக்­கா­வுடன் சேர்ந்து ரணில் செயற்­பட்டு வரு­கிறார்.

ஆனால் நான் அரபு நாடு­க­ளுடன் இருக்­கிறேன். பலஸ்­தீ­னத்தின் நண்­ப­ராக இருக்­கிறேன். ஜெனீ­வாவில் முஸ்லிம் நாடுகள் எமக்கே ஆத­ரவு வழங்­கின. இவற்றை  ஒரு­போதும் நான் மறந்து விட­வில்லை. நான் நன்றிக் கட­னுள்­ளவன்.

ஆனால் முஸ்­லிம்கள் மத்­தியில் என்னைப் பற்றி தவ­றான பிர­சா­ரங்­களை ஐக்­கிய தேசியக் கட்சி முன்­னெ­டுத்து வரு­கி­றது.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக செயற்­பட்ட இன­வாதக் கருத்­துக்­களைப் பரப்­பிய பகி­ரங்­க­மாக முஸ்­லிம்­களை எதிர்த்து வந்த சம்­பிக்க போன்ற இன­வா­திகள் இன்று ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் கூட்டுச் சேர்ந்­துள்­ளார்கள்.

அதனால் முஸ்­லிம்­களின் நண்பன் யார் என்­பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எதிர்­வரும் எனது ஆட்­சியில் முஸ்­லிம்­க­ளுக்கு எந்­த­வித கஷ்­டமும் இடம்­பெற இடம் கொடுக்க மாட்டேன். 

இன்று முஸ்­லிம்­களின் வர்த்­த­கத்­துக்கு மாத்­தி­ர­மல்ல, ஏனைய இனத்­த­வ­ரதும் வர்த்­த­கத்­துக்கு அடி வீழ்ந்­துள்­ளது. பாதிப்­பேற்­பட்­டுள்­ளது. முஸ்­லிம்­களின் பிர­தான பொரு­ளா­தாரம் வர்த்­த­கத்­தி­லேயே தங்­கி­யுள்­ளது.

ஐக்­கிய தேசியக் கட்சி இதனை திட்­ட­மிட்டு சிதைத்து வரு­கி­றது. ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொய்ப் பிர­சா­ரங்­க­ளுக்கு உள்­ளா­கி­யி­ருக்கும் நீங்கள் எனக்கு வாக்­க­ளிப்­பீர்­களோ தெரி­யாது. (கூட்­டத்தில் கலந்து கொண்­டிந்­த­வர்கள் உங்­க­ளுக்­குத்தான் வாக்கு, நீங்கள் தான் பிர­தமர் என குரல் எழுப்­பி­னார்கள்).

இந்­நாட்டில் முஸ்­லிம்கள் ஏனைய இனத்­த­வ­ருடன் ஒற்­று­மை­யாக வாழ வேண்டும். அப்­போ­துதான்  முஸ்­லிம்­ ச­மூ­கமும் நாடும் எழுச்சி பெறும். அவ்­வா­றான ஒரு சூழலை உரு­வாக்­கு­வ­தாக நான் உறு­தி­ய­ளிக்­கிறேன். சம­யங்­க­ளுக்கு எதி­ரான செயற்­பா­டு­க­ளுக்கு முடிவு கட்­டப்­படும்.

நாட்டின் அபி­வி­ருத்­திகள் இன்று முடக்­கப்­பட்டு விட்­டன. 58 ஆயிரம் கிரா­மியத் திட்­டங்கள் செய­லி­ழக்கச் செய்யப்பட்டுள்ளன. 15 இலட்சம் பேர் தொழில்களை இழந்துள்ளார்கள். ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பொய் வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

நாடும் நாட்டு மக்களும் முஸ்லிம் சமுதாயமும் இன்றிருக்கும் மோசமான நிலைக்கும் கீழான நிலைக்கும் தள்ளப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என்றார். வடிவெள்ளி

10 comments:

  1. How can he help to muslim society ?.he just is parliment member so dont vote for him

    ReplyDelete
  2. 2015 joke from MR.Hiiiiiiiiiiiiiiiiii

    ReplyDelete
  3. முஸ்லிம் கடைகளையும்,வீடுகளையும் எரித்தது உனக்கு சிறு தவறு.உன்னை போன்றவர்கள் பல் இனம் வாழும் நாட்டுக்கு தலைவனாக இருப்பது இந்த நாட்டுக்கு சாபக்கேடு

    ReplyDelete
  4. ஒரு சில தவறுகள் என்ன? ஞானசாரையை கழுத்தில் கட்டிக் கொண்டு செய்த துரோகங்கள்? தர்கா நகர அசம்பாவிதத்தின்போது குற்றவாளிகளைக் கைது செய்தும் விடுதலை செய்த உங்கள் கோத்தா? காலியில் பொது பல சேனாவின் காரியாலயத்தைத் திறந்த அதே கோத்தா? உங்கள் மகனால் வஸீம் தாஜுத்தீனின் கொலை? எமது முஸ்லிம்களை பீதியில் ஆழ்த்தி பொருளாதாரத்தை சுரண்டி, வெள்ளை வானில் கடத்தி ...... இன்னும் எத்தனை???? இவைகளையெல்லாம் வைத்துக்கொண்டு முஸ்லிம்களிடம் வாக்குக் கேட்க மானம் மரியாதை இல்லையா? அஸ்வர், முஸம்மில், அப்துஸ் ஸத்தார் போன்ற முஸ்லிம்களை விற்று வயிறு வளர்க்கும் கும்பல்களுக்காக இனி ஒரு போதும் எமது முஸ்லிம்கள் ஏமாறப் போவதில்லை.

    ReplyDelete
  5. உண்மை தான். முஸ்லிம்கள் நாட்டுக்கு விரோதமாகவும் செயற்படக் கூடாது. முஸ்லிம் நாடுகளின் உதவிகளைப் பெற்றுக் கொண்டே முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டவனை இனி ஒரு போதும் நம்பவும் கூடாது.

    ReplyDelete
  6. இவர் ஒரு துரோகி இவரை நம்பவேண்டாம் சில நாட்களுக்கு முன்பு இவருடைய தேர்தல் பிரச்சாரத்தில் சிறுபான்மை சமூகத்தை இல்லாத கொடி தொங்கவிடப்பட்டது இது எல்லாம் இவருக்கு தெரியாமலில்லை இப்போது ஒன்றும் தெரியாதவர் போல நடிக்கின்றார். இவருடைய பின்னால் வால் பிடித்து திரியும் மானம் கெட்ட குருநாகல் மாகாணசபை உறுப்பினருக்கு செருப்பால் அடிக்க வேண்டும்.

    ReplyDelete
  7. குடிகாரனின் பேச்சு விடிஞ்சாப் போச்சி மாதிரி ரகர் வீரர் வசீம் தாஜுதீனின் கேசும் முடிந்தால் எஞ்சியுள்ளதும் போச்சி சார்

    ReplyDelete
  8. 1. Ungal vayazenna Aiya ?

    2. Muslimkajukku nadanthavai onra iranda ?

    3. Elufazila thirunthap pogireergal ?

    4. Neengal valangiya Tendergalil Eththanai per Muslimgal ?

    5. Inru neengl pazaviyil irunthirunthaal Muslimgalin nilai ennavagi irukkum ?

    6. Ulaththooymai irunthaal Muslimgalidam Mannippuk koralamey ?

    7. Pattum padaamal shamaalikkap paarkkireergal ! Ulagariya cheiza periya Kutram.
    Mannippukketpazil en thayakkam ?
    8. Vaakkugalukkagavalla . Sheiza kutraththai unarnthom enpazan velippadu..

    ReplyDelete
  9. நல்ல விந்தை இவரது பெயரைச்சொல்லி முஸ்லிம்களுக்கு எதிராக தவறுகள் நிகழ்ந்ததாம், இவருக்கு அது தெரியாதது போல் பேசுகிறார் அண்டப்புழுகன். அளுத்கம தாக்குதலுக்கு எதிராக நீ எடுத்த நடவடிக்கை என்ன? இவ்வன்முறையை தூண்டிய பொது பல சேனாவுக்கு எதிராக நீ புடுங்கியது என்ன?
    மேடைக்கு மேடை உன் இலட்சியங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. இந்த மேடையில் முஸ்லிம்களை தலை நிமிர்ந்து வாழ வைப்பதே எனது இலக்காகும் என்று மாற்றி மாற்றி அறிக்கை விடுவதிலேயே உனது அயோக்கிய குணம் தெரிகிறது. முஸ்லிம்களை தலை நிமிர்ந்து வாழ வைக்க நினைக்காமல் இருந்தாலே போதும் அவர்கள் தலை நிமிர்ந்து வாழ்வார்கள்.
    முஸ்லிம்கள் நாட்டுக்கு துரோகம் செய்பவர்கள் அல்ல என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் நிறையவே உண்டு. பண்டைய ஏடுகளை புரட்டிப்பார்த்தால் தெரியும்.

    அரவணைக்க, ஆதரவு வழங்க அரபு நாடுகள் தேவைப்படும் ஆனால் தேவை முடிந்த அடுத்த நாளே அல்லாஹ்வுக்கு எதிராகவும் அல்குர்ஆனுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் நடந்தேறும். எதுவுமே நடக்காததுபோல் நீ இருப்பாய். அது மட்டுமா காலையில் பாலஸ்தீனுக்கு ஆதரவு மாலையில் இஸ்ரேலுக்கு செங்கம்பள விரிப்பு. பாலஸ்தீனுக்கு ஆதரவாய் இஸ்ரேலிய தூரகத்துக்கு கதவடைத்த சிறிமாவோ எங்கே? மூடிய கதவை அகலத்திறந்து வரவேற்பளித்த நீ எங்கே?
    உன்னைப் பற்றி முஸ்லிம்களிடத்தில் தவறாக பிரச்சாரம் யாரும் செய்யத் தேவை இல்லை. உன்னைப் பற்றி அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
    முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத கருத்துக்கள் விதைக்கும், முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத நடவடிக்கையில் ஈடுபடும் முதன்மை பயங்கரவாத இயக்கமான பொது பல சேனா இப்போதும் உன்னுடன்தான் இருக்கின்றது, அதனை போசித்து வளர்த்தவனும் வளர்ப்பவனும் நீயும் உன் குடும்பமும் தானே?
    முஸ்லிம்களின் வியாபாரத்துக்கு அடி விழுந்தது யாரால்? அடிக்க வேண்டும் என்று சதித் திட்டம் போட்டதும் அதை குண்டர்களையும், பயங்கரவாத இயக்கமான பொது பல சேனாவையும் வைத்து அரங்கேற்றியது நீயும் உன் குடும்பமும் தானே?
    ஆக மொத்தத்தில் எல்லா அடாவடித்தனமும் செய்தது நீயும் உன் குடும்பமும் அடுத்தவர் மேல் பழி போட்டு தப்பிக்க நினைக்காதே. அஸ்வர், காதர், அப்துல் சத்தார் போன்ற கீழ்த்தரமான சில கயவர்கள் முஸ்லிம் பெயர்தாங்கி உன்னோடு இருப்பதால் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் அப்படித்தான் என்று எண்ணி விடவேண்டாம் “அடக்கம் உடையார் அறிவிலார் என்றெண்ணிக்
    கடக்கக் கருதவும் வேண்டா - மடைத்தளவில்
    ஓடுமின் ஓட உறுமீன் வருமளவும்
    வாடி இருக்குமாம் கொக்கு"
    (மூதுரை, பாடல் :16)

    ReplyDelete
  10. Sabaas Gee sariaahachchonneer

    ReplyDelete

Powered by Blogger.