முஸ்லிம்கள் நாட்டுக்கு விரோதமாக செயற்படக்கூடாது - மஹிந்த ராஜபக்ஷ
எனது ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு சில தவறுகள் இடம்பெற்றுள்ளதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அது நான் செய்த தவறுகளல்ல. எனது பெயரைக் கூறி இடம்பெற்ற தவறுகள். அவ்வாறான தவறுகளுக்கு எதிர்காலத்தில் ஒரு போதும் இடமளிக்கமாட்டேன் என உறுதியளிக்கிறேன்.
இந்நாட்டில் முஸ்லிம்களையும் ஏனைய சமூகத்தினரைப் போல் தலைநிமிர்ந்து வாழவழி சமைப்பதே எனது இலக்காகும் என முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருணாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷ குருணாகல் மாவட்ட முஸ்லிம் சமூகத்தை குருணாகல் வில்கொடவில் சந்தித்தார். குருணாகல் மாநகர சபை உறுப்பினரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளருமான அப்துல் சத்தாரின் தலைமையில் நடைபெற்ற குறிப்பிட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில் தெரிவித்ததாவது;
‘முஸ்லிம்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிந்தித்து செயற்பட வேண்டும். நாட்டுக்கு விரோதமாக செயற்படக்கூடாது. ஐக்கிய தேசியக் கட்சி இப்போது பொய்ப் பிரசாரங்களைச் செய்து வருகிறது.
இனவாதக் கருத்துக்களைப் பரப்பி வருகிறது. முஸ்லிம்களின் விரோதி ரணில் விக்கிரமசிங்கவே. நானல்ல, சர்வதேச முஸ்லிம்களினதும் எதிரியான அமெரிக்காவுடன் சேர்ந்து ரணில் செயற்பட்டு வருகிறார்.
ஆனால் நான் அரபு நாடுகளுடன் இருக்கிறேன். பலஸ்தீனத்தின் நண்பராக இருக்கிறேன். ஜெனீவாவில் முஸ்லிம் நாடுகள் எமக்கே ஆதரவு வழங்கின. இவற்றை ஒருபோதும் நான் மறந்து விடவில்லை. நான் நன்றிக் கடனுள்ளவன்.
ஆனால் முஸ்லிம்கள் மத்தியில் என்னைப் பற்றி தவறான பிரசாரங்களை ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுத்து வருகிறது.
முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்ட இனவாதக் கருத்துக்களைப் பரப்பிய பகிரங்கமாக முஸ்லிம்களை எதிர்த்து வந்த சம்பிக்க போன்ற இனவாதிகள் இன்று ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்துள்ளார்கள்.
அதனால் முஸ்லிம்களின் நண்பன் யார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எதிர்வரும் எனது ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எந்தவித கஷ்டமும் இடம்பெற இடம் கொடுக்க மாட்டேன்.
இன்று முஸ்லிம்களின் வர்த்தகத்துக்கு மாத்திரமல்ல, ஏனைய இனத்தவரதும் வர்த்தகத்துக்கு அடி வீழ்ந்துள்ளது. பாதிப்பேற்பட்டுள்ளது. முஸ்லிம்களின் பிரதான பொருளாதாரம் வர்த்தகத்திலேயே தங்கியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி இதனை திட்டமிட்டு சிதைத்து வருகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொய்ப் பிரசாரங்களுக்கு உள்ளாகியிருக்கும் நீங்கள் எனக்கு வாக்களிப்பீர்களோ தெரியாது. (கூட்டத்தில் கலந்து கொண்டிந்தவர்கள் உங்களுக்குத்தான் வாக்கு, நீங்கள் தான் பிரதமர் என குரல் எழுப்பினார்கள்).
இந்நாட்டில் முஸ்லிம்கள் ஏனைய இனத்தவருடன் ஒற்றுமையாக வாழ வேண்டும். அப்போதுதான் முஸ்லிம் சமூகமும் நாடும் எழுச்சி பெறும். அவ்வாறான ஒரு சூழலை உருவாக்குவதாக நான் உறுதியளிக்கிறேன். சமயங்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு முடிவு கட்டப்படும்.
நாட்டின் அபிவிருத்திகள் இன்று முடக்கப்பட்டு விட்டன. 58 ஆயிரம் கிராமியத் திட்டங்கள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன. 15 இலட்சம் பேர் தொழில்களை இழந்துள்ளார்கள். ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பொய் வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
நாடும் நாட்டு மக்களும் முஸ்லிம் சமுதாயமும் இன்றிருக்கும் மோசமான நிலைக்கும் கீழான நிலைக்கும் தள்ளப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என்றார். வடிவெள்ளி
How can he help to muslim society ?.he just is parliment member so dont vote for him
ReplyDelete2015 joke from MR.Hiiiiiiiiiiiiiiiiii
ReplyDeleteமுஸ்லிம் கடைகளையும்,வீடுகளையும் எரித்தது உனக்கு சிறு தவறு.உன்னை போன்றவர்கள் பல் இனம் வாழும் நாட்டுக்கு தலைவனாக இருப்பது இந்த நாட்டுக்கு சாபக்கேடு
ReplyDeleteஒரு சில தவறுகள் என்ன? ஞானசாரையை கழுத்தில் கட்டிக் கொண்டு செய்த துரோகங்கள்? தர்கா நகர அசம்பாவிதத்தின்போது குற்றவாளிகளைக் கைது செய்தும் விடுதலை செய்த உங்கள் கோத்தா? காலியில் பொது பல சேனாவின் காரியாலயத்தைத் திறந்த அதே கோத்தா? உங்கள் மகனால் வஸீம் தாஜுத்தீனின் கொலை? எமது முஸ்லிம்களை பீதியில் ஆழ்த்தி பொருளாதாரத்தை சுரண்டி, வெள்ளை வானில் கடத்தி ...... இன்னும் எத்தனை???? இவைகளையெல்லாம் வைத்துக்கொண்டு முஸ்லிம்களிடம் வாக்குக் கேட்க மானம் மரியாதை இல்லையா? அஸ்வர், முஸம்மில், அப்துஸ் ஸத்தார் போன்ற முஸ்லிம்களை விற்று வயிறு வளர்க்கும் கும்பல்களுக்காக இனி ஒரு போதும் எமது முஸ்லிம்கள் ஏமாறப் போவதில்லை.
ReplyDeleteஉண்மை தான். முஸ்லிம்கள் நாட்டுக்கு விரோதமாகவும் செயற்படக் கூடாது. முஸ்லிம் நாடுகளின் உதவிகளைப் பெற்றுக் கொண்டே முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டவனை இனி ஒரு போதும் நம்பவும் கூடாது.
ReplyDeleteஇவர் ஒரு துரோகி இவரை நம்பவேண்டாம் சில நாட்களுக்கு முன்பு இவருடைய தேர்தல் பிரச்சாரத்தில் சிறுபான்மை சமூகத்தை இல்லாத கொடி தொங்கவிடப்பட்டது இது எல்லாம் இவருக்கு தெரியாமலில்லை இப்போது ஒன்றும் தெரியாதவர் போல நடிக்கின்றார். இவருடைய பின்னால் வால் பிடித்து திரியும் மானம் கெட்ட குருநாகல் மாகாணசபை உறுப்பினருக்கு செருப்பால் அடிக்க வேண்டும்.
ReplyDeleteகுடிகாரனின் பேச்சு விடிஞ்சாப் போச்சி மாதிரி ரகர் வீரர் வசீம் தாஜுதீனின் கேசும் முடிந்தால் எஞ்சியுள்ளதும் போச்சி சார்
ReplyDelete1. Ungal vayazenna Aiya ?
ReplyDelete2. Muslimkajukku nadanthavai onra iranda ?
3. Elufazila thirunthap pogireergal ?
4. Neengal valangiya Tendergalil Eththanai per Muslimgal ?
5. Inru neengl pazaviyil irunthirunthaal Muslimgalin nilai ennavagi irukkum ?
6. Ulaththooymai irunthaal Muslimgalidam Mannippuk koralamey ?
7. Pattum padaamal shamaalikkap paarkkireergal ! Ulagariya cheiza periya Kutram.
Mannippukketpazil en thayakkam ?
8. Vaakkugalukkagavalla . Sheiza kutraththai unarnthom enpazan velippadu..
நல்ல விந்தை இவரது பெயரைச்சொல்லி முஸ்லிம்களுக்கு எதிராக தவறுகள் நிகழ்ந்ததாம், இவருக்கு அது தெரியாதது போல் பேசுகிறார் அண்டப்புழுகன். அளுத்கம தாக்குதலுக்கு எதிராக நீ எடுத்த நடவடிக்கை என்ன? இவ்வன்முறையை தூண்டிய பொது பல சேனாவுக்கு எதிராக நீ புடுங்கியது என்ன?
ReplyDeleteமேடைக்கு மேடை உன் இலட்சியங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. இந்த மேடையில் முஸ்லிம்களை தலை நிமிர்ந்து வாழ வைப்பதே எனது இலக்காகும் என்று மாற்றி மாற்றி அறிக்கை விடுவதிலேயே உனது அயோக்கிய குணம் தெரிகிறது. முஸ்லிம்களை தலை நிமிர்ந்து வாழ வைக்க நினைக்காமல் இருந்தாலே போதும் அவர்கள் தலை நிமிர்ந்து வாழ்வார்கள்.
முஸ்லிம்கள் நாட்டுக்கு துரோகம் செய்பவர்கள் அல்ல என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் நிறையவே உண்டு. பண்டைய ஏடுகளை புரட்டிப்பார்த்தால் தெரியும்.
அரவணைக்க, ஆதரவு வழங்க அரபு நாடுகள் தேவைப்படும் ஆனால் தேவை முடிந்த அடுத்த நாளே அல்லாஹ்வுக்கு எதிராகவும் அல்குர்ஆனுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் நடந்தேறும். எதுவுமே நடக்காததுபோல் நீ இருப்பாய். அது மட்டுமா காலையில் பாலஸ்தீனுக்கு ஆதரவு மாலையில் இஸ்ரேலுக்கு செங்கம்பள விரிப்பு. பாலஸ்தீனுக்கு ஆதரவாய் இஸ்ரேலிய தூரகத்துக்கு கதவடைத்த சிறிமாவோ எங்கே? மூடிய கதவை அகலத்திறந்து வரவேற்பளித்த நீ எங்கே?
உன்னைப் பற்றி முஸ்லிம்களிடத்தில் தவறாக பிரச்சாரம் யாரும் செய்யத் தேவை இல்லை. உன்னைப் பற்றி அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத கருத்துக்கள் விதைக்கும், முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத நடவடிக்கையில் ஈடுபடும் முதன்மை பயங்கரவாத இயக்கமான பொது பல சேனா இப்போதும் உன்னுடன்தான் இருக்கின்றது, அதனை போசித்து வளர்த்தவனும் வளர்ப்பவனும் நீயும் உன் குடும்பமும் தானே?
முஸ்லிம்களின் வியாபாரத்துக்கு அடி விழுந்தது யாரால்? அடிக்க வேண்டும் என்று சதித் திட்டம் போட்டதும் அதை குண்டர்களையும், பயங்கரவாத இயக்கமான பொது பல சேனாவையும் வைத்து அரங்கேற்றியது நீயும் உன் குடும்பமும் தானே?
ஆக மொத்தத்தில் எல்லா அடாவடித்தனமும் செய்தது நீயும் உன் குடும்பமும் அடுத்தவர் மேல் பழி போட்டு தப்பிக்க நினைக்காதே. அஸ்வர், காதர், அப்துல் சத்தார் போன்ற கீழ்த்தரமான சில கயவர்கள் முஸ்லிம் பெயர்தாங்கி உன்னோடு இருப்பதால் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் அப்படித்தான் என்று எண்ணி விடவேண்டாம் “அடக்கம் உடையார் அறிவிலார் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத்தளவில்
ஓடுமின் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு"
(மூதுரை, பாடல் :16)
Sabaas Gee sariaahachchonneer
ReplyDelete