Header Ads



'கடந்தமுறை மகிந்தவுடன் கோப்பி குடித்து பிரச்சினையானதால், இம்முறை மறுபக்கம் பார்த்துகொண்டேன்'

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தான் நேருக்கு நேர் கண்டதாகவும் அப்போது தான் வேறு பக்கம் பார்த்து கொண்டு சென்று விட்டதாகவும் ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஊவா பரணகம பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் மகிந்த ராஜபக்ச வந்தார். நானும் அவரும் நேருக்கு நேர் சந்தித்து கொண்டோம்.

நான் பண்டாரவளையில் இருந்து அப்புத்தளை நோக்கி சென்றேன். அவர் பதுளைக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் என்னைக் கண்டார்.

கடந்த முறை கோப்பி குடித்து சிறிய பிரச்சினை ஆனாது. இதனால், இரண்டு முறை நான் அவரை கண்ட பின்னர் மறுபக்கம் பார்த்து கொண்டேன்.

நான் மறுபக்கம் பார்த்து கொண்டு செல்லும் போது என்னை காட்டி மகிந்த ராஜபக்ச எதனையோ கூறினார். இவன் தான் என்னை இந்த நிலைக்கு ஆளாக்கினான் என்று அவர் கட்டாயம் கூறியிருப்பார் என ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.