Header Ads



வசீம் தாஜூடீன் கொலைச் சந்தேக நபர்கள், இத்தாலிக்கு தப்பியோட்டம்

ரகர் வீரர் வசீம் தாஜூடீன் கொலைச் சந்தேக நபர்கள் இருவர் இத்தாலிக்கு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இரகசியமான முறையில் இவர்கள் இத்தாலிக்கு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாஜூடின் கொலை தொடர்பில் சர்ச்சைகள் எழத் தொடங்கியுவுடன் இவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த தகவல்களை அறிந்து கொண்ட தாஜூடின் குடும்பத்தினர், சட்டத்தரணிகளை இத்தாலிக்கு அனுப்பி அவர்கள் பற்றிய தகவல்களை திரட்டியுள்ளனர்.

எங்கு தங்கியிருக்கின்றார்கள் எங்கு பணியாற்றுகின்றார்கள் என்பது பற்றிய விபரங்கள் திரட்டி அவற்றை சட்டத்தரணிகள், பொலிஸாருக்கு வழங்கியுள்ளனர்.

சந்தேக நபர்கள் இத்தாலி செல்வதற்கு கடந்த அரசாங்கத்தின் அரசியல்வாதியொருவரது நண்பர் உதவிகளை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் தாஜூடினின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. எல்லாம் தேர்தலுக்காக ஆடின ஆட்டமெல்லாம் இப்போ முடிந்து போய் விட்டது.அவர்கள் தப்பிச்சல்லும் வரை துரித விசாரணை செய்வோர்கள் என்ன செய்கிறார்கள்.ஆறு கடக்கிற வரையும்தான் அப்பப்பா கடந்து முடிந்தால் நீயார் நானார்தான் .

    ReplyDelete
  2. italy and dubai both heaven for murderers.

    ReplyDelete
  3. All are finished. Some time they will ask who is thajudeen.

    ReplyDelete
  4. இது எல்லாம் வெறும் ஆள் ஏமாற்று வேலை ஏனென்றால் ஆட்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு பின்னர் பிரதிவாதிகள் வரவில்லை என வழக்கை தள்ளுபடி செய்ய ஒரு உத்தி இது எது எவ்வாறிருப்பினும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஞாயம் கிடைக்குமா என்பதில் இவ்விடயம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது பொறுத்திருந்து பார்ப்போம்

    ReplyDelete

Powered by Blogger.