Header Ads



மஹிந்தவிற்கு வேட்பு மனு வழங்குவது பற்றி, சுதந்திர கட்சி தீர்மானம் மேற்கொள்ளவில்லை - சந்திரிக்கா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வேட்பு மனு வழங்குவது தொடர்பில் சுதந்திர கட்சி தீர்மானம் எதனையும் மேற்கொள்ளவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரனதுங்க தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொட மருத்துவமனையில் இன்று இடம் பெற்ற தானம் வழங்கும் நிகழ்வொன்றில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரனதுங்க பங்கேற்றிருந்தார்.

இதன்போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

தற்சமயம் நாட்டை கட்டியெழுப்புவதற்காக சகலரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து வளமான நாட்டை உருவாக்க செயற்பாடுகளை முன் எடுக்க வேண்டும். இதற்கான ஒத்துழைப்பு கட்சி, மத, இன பேதமின்றி நல்க வேண்டும்.

சிறந்த தலைவர் ஒருவரின் கீழ் அணிவகுப்பதற்கான செயற்பாடுகள் முன் எடுக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரனதுங்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.