Header Ads



'கற்பனையில் மிதக்கும், மஹிந்த தரப்பு'

பெரிதுபடுத்திய நம்பிக்கையுடன் மஹிந்த ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுவதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் ஆட்சேபித்துள்ளனர்.

இந்தநிலையில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் மஹிந்தவின் ஆதரவில்லாமல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வெற்றிக்கு கொண்டு செல்ல முடியும் என்றும் அந்த உறுப்பினர்கள் நம்புவதாக கொழும்பின் ஊடகம் ஒன்று தெரிவிக்கிறது.

மஹிந்த ராஜபக்சவுக்கு குறைந்தளவான ஆதரவே உள்ளது. எனினும் அவர்கள் தமக்கு அதிக ஆதரவு உள்ளதாக கற்பனை செய்கின்றனர்.

இந்தநிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து குற்றம் சுமத்தப்படாத வேட்பாளர்களை பெயரிடுவதன் மூலம் தேர்தலில் வெற்றி பெறமுடியும் என்று மஹிந்த எதிர்ப்பாளர்கள் நம்புகின்றனர்.

இதற்கு உதாரணமாக மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தப்பட்டுள்ள தமது பழைய சகாக்களுடன் வந்தால், அவருக்கு ஆதரவு கிடைக்காது என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளமையை ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது

No comments

Powered by Blogger.