Header Ads



"புலிகளினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக, மஹிந்த தரப்பு பிரச்சாரம் செய்யக் கூடும்"

நிதி அமைச்சர் ரவி கருணநாயக்க வெளியிட்டுள்ள எச்சரிக்கை குறித்து விசாரணை நடத்தப்பட வேணடுமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கோரியுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளருமான டிலான் பெரேரா இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என ரவி கருணாநாயக்க கூறியிருந்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அந்த தாக்குதல் புலிகளினால் மேற்கொள்ளப்பட்டதாக மஹிந்த தரப்பு பிரச்சாரம் செய்யக் கூடுமென அவர் தெரிவித்திருந்தார்.

ரவி கருணாநாயக்கவின் இந்த கருத்து குறித்து பொலிஸார் உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டுமென டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

புளுமெண்டல் வீதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது.

இந்த தாக்குதல் சம்பவம் மற்றும் ரவி கருணாநாயக்கவின் எச்சரிக்கை என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென இன்று கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.