சாய்ந்தமருது மக்கள், சலனமடையத் தேவையில்லை - ரவூப் ஹக்கீம்
(ஹாசிப் யாஸீன்)
சாய்ந்தமருதில் மாபெரும் தேர்தல் பிரச்சார கூட்டம் கடற்கரை வீதியிலுள்ள
பௌசி ஞாபகார்த்த மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்றது.
இதில் பெரும் திரளான கட்சியின் போராளிகளும், இளைஞர்களும் கலந்து கொண்டு பெரும் வரவேற்பினை கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீமுக்கு வழங்கினர்.
இதன் மூலம் சாய்ந்தமருது மு.காவின் கோட்டைதான் என மிகத் தெளிவான
செய்தியினை அம்பாறை மாவட்ட மக்களுக்கும், ஏனைய கட்சிகளுக்கும் தெரிவித்துள்ளனர்.
சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபை மு.கா தலைவர் வாக்குறுதியளித்தபடி தேர்தல் முடிந்தவுடன் வழங்கப்படும். இதில் சாய்ந்தமருது மக்கள் சலனமடையத் தேவையில்லை என மு.கா தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இத்தேர்தலில் அம்பாறை மாவட்ட மக்கள் தங்களது விருப்பு, வெறுப்புகளுக்கு
அப்பால் எமது கட்சியின் வேட்பாளர்கள் மூவருக்கும் வாக்களிக்க வேண்டும். இதன் மூலம் எமது மாவட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
பிரதேசம் பாராது, அனைத்து பிரதேச வாக்காளர்களும் கட்டாயம் மூன்று முஸ்லிம் போட்டியாளர்களுக்கும் ( 2, 9, 10 ) வாக்களிக்க வேண்டும் என்பதை தெளிவு படுத்துவதுடன், அதை உறுதிபடுத்திக் கொள்ளல் வேண்டும்.
ReplyDelete