மஹிந்தவிற்கு எதிராக கூட்டணியொன்றை நிறுவ, சந்திரிக்கா பேச்சுவார்த்தையை ஆரம்பித்தார்
மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக போட்டியிடுவதற்கு கூட்டணியொன்றை நிறுவுவதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அன்னச் சின்னத்தில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன போட்டியிட்டபோது ஆதரவளித்த கூட்டணியின் பிரதான கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட அனுமதிக் கப்பட்டால் மைத்திரி அணியை சேர்ந்த 46 பேர் ஐக்கிய தேசியக் கட்சியுடனோ அல்லது சந்திரிகா கூட்டணியில் இணைவதற்குத் தயாராகுவதாகவும் தெரியவருகிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ களமிறங்கினால் நானும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு தயார் என்று நேற்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டிருந்திருந்தார்.
இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிட போவதாக நேற்று அறிவித்துள்ளார். இதன்பிரகாரம் ஆளும் பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலுக்கு தயாராகும் பணிகளை முன்னெடுத்து வருகிறது.
எனினும் மஹிந்த ராஜபக்ஷ களமிறங்க தீர்மானித்துள்ள நிலையில், அவருக்கு எதிராக கூட்டணியொன்றை ஆரம்பிக்கும் முகமாக கடந்த ஜனாதிபதி தேர்தலின் எதிரணியின் அன்னச் சின்ன கூட்டணியின் பிரதான கட்சிகளுடன் முக்கிய கட்ட பேச்சுவார்த்தைகளை சந்திரிகா குமாரதுங்க ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.
ஐக்கிய தேசியக் கட்சி, ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட பிரதான கட்சிகளுடன் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாநாயக்க குமாரதுங்க ஆரம்பித்துள்ளார்.
இதனூடாக கூட்டணிக் கட்சியாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றார்.அத்தோடு மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டால் மைத்திரி அணியை சேர்ந்த 46 பேர் ஐக்கிய தேசியக் கட்சியுடனோ அல்லது சந்திரிகா கூட்டணியில் இணைவதற்கு தயாராகுவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment