Header Ads



மஹிந்தவுக்கு வேட்புமனு வழங்கினால், எதிர்ப்பு நடவடிக்கை குறித்து ஆராயப்படுகிறது - ராஜித

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் மஹிந்த ராஜபக்ச பொதுத்தேர்தலில் போட்டியிட ஜனாதிபதி இணங்கப்போவதில்லை என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதில் ஜனாதிபதி உறுதியுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனு அனுமதி வழங்கினால் அந்தக்கூட்டமைப்பில் உள்ள மஹிந்த எதிர் தரப்பு, எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆராய்ந்து வருகிறது என்றும் ராஜித தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.