பாராளுமன்ற தேர்தல் எந்தமுறையில் நடந்தாலும், UNP பாரிய வெற்றிபெறும் - ரணில்
பொதுத்தேர்தல் எந்த முறையில் நடத்தப்பட்டாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகள் குறித்து கிராம மக்களிடம் அறிவுறுத்துமாறு சகல அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்தார்.
எதிர்வரும் பொதுத்தேர்தல் எந்த முறையில் நடத்தப்பட்டாலும் ஐக்கிய தேசியக்கட்சி பாரிய வெற்றி பெறும் என்று தெரிவித்த பிரதமர், அந்த வெற்றியை மாபெரும் வெற்றியாக மாற்றியமைக்க வேண்டுமானால் சகலரும் அவரவர் தேர்தல் தொகுதிகளில் இருந்து மக்கள் சேவையில் ஈடுபட வேண்டுமென அறிவுறுத்தினார்.
எதிர்வரும் பொதுத்தேர்தலை விகிதாசார தேர்தல் முறையில் நடத்துமாறும், 20ஆவது திருத்தம் நிறைவேற்றிய பின்னர் தொகுதிவாரி தேர்தல் முறையின் அடிப்படையில் தேர்தலை நடத்துமாறு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே, எவ்வாறான தேர்தல் நடத்தப்பட்டாலும் அந்த தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி பெரும்பான்மை ஆசனங்களை பெற்று ஆட்சியமைக்க கூடியதாக இருக்க வேண்டும். இதற்காக சகலரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
Post a Comment