Header Ads



இலங்கைக்கு வரும் கடற்சிங்கங்களும், புலிகளும்..!

மிருகப் பரிமாற்ற திட்டத்தின் கீழ் சில உயிரினங்களை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களம் உத்தேசித்துள்ளது.

இந்தியா , சீனா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து இந்த உயிரினங்கள் கொண்டுவரப்பட்டவுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் அனுர டி சில்வா கூறியுள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் கறுப்பு மற்றும் வெள்ளை அன்னங்களை நாட்டிற்கு கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ளது

கடற்சிங்கங்கள், பனிப் பிரதேசங்களில் வசிக்கும் புலிகள் மற்றும் சில வகையான காட்டுப் பூனைகளுக்கும் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளன.

இலங்கையிலிருந்து சிறுத்தை, ஜிராஃப் ஆகிய விலங்குகளை அந்த நாடுகளுக்கு அனுப்பிவைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது

No comments

Powered by Blogger.