Header Ads



"முஸ்லிம் சமூ­கத்­திடம் ஆர்வம், குறை­வா­கவே காணப்படுகிறது"

அர­சியல் பிர­தி­நி­தித்­து­வத்தை பெற்­றுக்­கொள்­வ­தற்­கான ஆர்வம் முஸ்லிம்  சமூ­கத்­திடம் காணப்­பட்ட போதிலும் வாக்­காளர் இடாப்பில் தமது பெயர்­களை பதிந்­து­கொள்ளும் ஆர்வம் குறை­வா­கவே இருப்­ப­தாக மத்­திய கொழும்பு ஐக்­கி­ய­தே­சிய கட்­சியின் பிர­தான அமைப்­பா­ளரும் மேல் மாகா­ண­சபை உறுப்­பி­ன­ரு­மாக முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.

மரு­தானைஇ சுது­வெல பகு­தியில் இடம்­பெற்ற கட்­சியின் தொகுதி ஆத­ர­வா­ளர்­களை சந்­திக்கும் கூட்­ட­மொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் மேற்­காண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் மேலும் தெரி­விக்­கையில்இ  கடந்த 15 ஆம் திகதி முதல் 2015 ஆம் ஆண்­டிற்­கான வாக்­காளர் இடாப்பில் பெயர்­களை பதிந்­து­கொள்ளும் நட­வ­டிக்­கைகள் ஆரம்­ப­மா­னது. எதிர்­வரும் ஜூன் மாதம் 15 ஆம் திக­தி­யுடன் நிறை­வ­டை­ய­வி­ருக்கும் இப்­ப­திவு நட­வ­டிக்­கை­களில் முஸ்லிம் சமூ­கத்­தினர் ஆர்வம் மந்­தப்­போக்­கா­கவே காணப்­ப­டு­கின்­றது.

வாக்­க­ளிக்கும் உரி­மையை பயன்­ப­டுத்­து­வதன் முழு­மை­யான பயனை கடந்த ஜனா­தி­பதி தேர்­த­லின்­போது முஸ்­லிம்கள் உணர்ந்து கொண்­டனர். அத்­தேர்தல் 2012 ஆண்டு வாக்­காளர் இடாப்பின் அடிப்­ப­டை­யி­லேயே இடம்­பெற்­றது. இந்த தேர்­த­லின்­போது குறிப்­பாக கொழும்பு உள்­ளிட்ட பல பகு­தி­க­ளிலும் அதி­க­மான முஸ்­லிம்கள் வாக்­க­ளிக்கும் வாய்ப்பை இழந்­தி­ருந்­தனர்.

இந்­நி­லையில் எதிர்­வரும் தேர்­தல்கள் பழைய விகி­தா­சார முறையில் நடை­பெ­றுமா? அல்­லது புதிய கலப்பு முறையில் நடை­பெ­றுமா? என்­கிற சந்­தேகம் காணப்­படும் நிலை­யி­லேயே தற்­போது வாக்­காளர் இடாப்புப் பதி­வுகள் இடம்­பெற்று வரு­கின்­றன.
இதில் முஸ்­லிம்கள் ஆர்­வ­மின்றி இருப்­ப­தா­னது எதிர்­கால அர­சியல்  பிர­தி­நி­தித்­து­வத்தை பெரு­வா­ரி­யாக பாதிக்கும். இது தொடர்பில் சமூ­கத்தை விழிப்­பு­ணர்­வூட்­டு­மாறு தேசிய சூறா கவுன்ஸில் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் லீக் வாலிப முன்­ன­ணி­களின் சம்­மே­ளனம் ஆகி­யன வலி­யு­றுத்­தி­யுள்­ளன.

குறிப்­பாகஇ இப்­ப­தி­வு­க­ளுக்­கான விண்­ணப்­பங்­களை கிராம சேவகர் விநி­யோ­கிக்க வேண்டும். ஆனால் அந்­ந­ட­வ­டிக்கை சீராக இடம்­பெ­று­வ­தில்லை. எனவே நாம் ஆர்­வத்­துடன் சென்று கிராம சேவ­க­ரி­ட­மி­ருந்து விண்­ணப்­பங்­களை பெற்று உரிய முறையில் பூர்த்­தி­செய்து அவற்றை அவ­ரிடம் ஒப்படைக்கவேண்டும்.

இம்முறை மிகக் குறுகிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமையால் அனைவரும் ஆர்வத்துடன் வாக்காளர் இடாப்பில் தமது பெயர்களை பதிந்து முஸ்லிம் சமூகத்திற்கான பிரதிநிதித்துவத்தை பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

2 comments:

  1. arasil wathikal meethu nambikai illai

    ReplyDelete
  2. அப்படியா...?

    அதற்கு மக்களின் அபிலாசைகளை பாராளுமன்றத்திலோ அல்லது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பங்களிலோ பிரதிபலிக்காத முஸ்லீம் அரசியல்வாதிகளான நீங்களும்தான் ஒருவகையில் காரணம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.