Header Ads



மருதானை தீ விபத்தில், வபாத்தானவர்களின் பெயர் விபரங்கள்


-எம்.எஸ். பாஹிம்-

மருதானை உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலி யான மூன்று ஊழியர்களும் அடையாளங் காணப்பட்டுள்ளதோடு இவர்களின் பிரேத பரிசோதனை நேற்று பெரியாஸ்பத்திரியில் நடைபெற்றது. இவர்களில் இருவர் ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் மற்றவர் ஹட்டன் பிரதேச வாசி எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உணவகத்தில் ஏற்பட்ட எரிவாயு கசிவினால் இரண்டு மாடிகளைக் கொண்ட கட்டிடம் முற்றாக எரிந்து நாசமானதோடு மூவர் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தீயில் சிக்கி படுகாயடைந்த மூவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.

ஏறாவூர் இதாயத் நகரைச் சேர்ந்த 55 வயதான முஹம்மது அப்துல் லத்தீப், ஹட்டன் அகரபதனையைச் சேர்ந்த 40 வயதான செல்வேந்திரன், ஏறாவூரை சேர்ந்த 66 வயதான செய்க் மொஹிதீன் ஆகியோரே இவ்வாறு இறந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

தீ விபத்தினால் ஹோட்டலுக்கருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கும் கார் ஒன்றுக்கும் சேதம் ஏற்பட்டது. விபத்தினால் ஏற்பட்ட முழுமையான சேதம் இன்னும் மதிப்பிடப்படாதுள்ளதுடன் மருதானை பொலிஸார் மேலதிக விசாரணை நடத்துகின்றனர்.

No comments

Powered by Blogger.