யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டம்
யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று காலை 11.30 மணியளவில் ஆரம்பமாகியது.
இந்த
சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்தில், யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர்
ஜி.கே.பெரேரா மற்றும் யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும்
யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம், யாழ். மாவட்ட
பொலிஸ் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை தலைவர்கள்
மற்றும் சிறுவர் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முன்னாள் அரச
உத்தியோகத்தர்கள் வைத்தியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த
சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்தில், யாழ். மாவட்டத்தில் நடைபெறும்
வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் கஞ்சா, ஹெரோயின் பாவணைகள் மற்றும் கலாசார
சீர்கேடுகள் மதுபோதையில் இளைஞர்களின் இடையூறுகள் குறித்தும்
கலந்துரையாடப்பட்டன.
Post a Comment