Header Ads



ஜனாதிபதி மைத்திரியின் தலையில், முடி இல்லாமையினால் றிசாத் பதியுதீன் செய்த காரியம்..!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மூளைக்குள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சிந்தனைகள் புகுந்துள்ளதாக பொதுபல சேனா தெரிவித்துள்ளது,

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவ்வமைப்பின் தேசிய அமைப்பாளர் விதாரந்தெனிய நந்த தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் தலையில் முடி இல்லாமையினால் ரிஷாட்டினால் இக்காரியத்தை இலகுவாக சாதித்து கொள்ள முடிந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் ரிஷாட் கடந்த அரசாங்கத்துடன் இணைந்திருந்த காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதியுடன் இணைந்து கொண்டு அவரது தேவைகளை சாதித்து கொண்டார் என குற்றம் சுமத்திய தேரர்,

தற்போது அமைச்சர் புதிய அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு வில்பத்து காட்டையும் அழித்து இயற்கை வளங்களுக்கு பாரிய சேதம் விளைவிக்கின்றார் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

1 comment:

Powered by Blogger.