Header Ads



கட்டாரில் 350 இலங்கை பணியாளர்கள், தங்கியிருந்த குடியிருப்புகள் தீக்கிரை - பாதிக்கப்பட்டவர்கள் நிர்க்கதி

கட்டாரின் செகெலியா எனும் பகுதியில் 350 இலங்கை பணியாளர்கள்  தங்கியிருந்த  குடியிருப்புகள் தீக்கிரையாகியுள்ளன.

கட்டாரிலுள்ள துப்புரவு தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் இலங்கையர்கள் தங்கியிருந்த குடியிருப்பிலேயே தீ பரவியுள்ளது.

இதன் காரணமாக தாம் தம்முடைய உடைமைகள் அனைத்தையும் இழந்து, உணவு உறைவிடமற்ற நிலையில் இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் NFடிற்குத் தெரிவித்தனர்.

அதிகாரிகள் இதுபற்றி கவனம் செலுத்தி தமக்கான நிவாரணங்களை வழங்கவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை NF தொடர்புகொண்டு  வினவியபோது, தீவிபத்து தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு கட்டாரிலுள்ள இலங்கை தூதரகத்தின் உயர் அதிகாரி ஒருவருக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.