கிறிஸ் கெயில், 2 சிக்கன் துண்டுகளுக்கு மேல் தரமாட்டார் - சர்ஃபாராஸ் கான்
ஐ.பி.எல். தொடரின் மிகவும் இளம் வீரரான பெங்களுரு அணி வீரர் சர்ஃபராஸ்கானுக்கு 17 வயதுதான் ஆகிறது. இதே அணியில் ஆக மூத்த வீரர் மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த கிறிஸ் கெயில். நடப்பு ஐ.பி.எல். தொடரில் இந்த இளம் வீரருக்கும் மூத்த வீரருக்குமிடையே நல்ல நட்பு உருவாகிவிட்டது.
சிறுவயது பையனான சர்ஃபராஸ்கான் மீது கிறிஸ் கெயில் மிகவும் அக்கறை காட்டி வந்துள்ளார். பேட் செய்யும் விதம் குறித்து பல்வேறு டிப்ஸ்களையும் கிறிஸ் கெயில் சர்ஃபராஸ் கானுக்கு வழங்கியதோடு, அவரது திறமையை பட்டை தீட்ட பல்வேறு அறிவுரைகளையும் கொடுத்துள்ளார் கெயில்.
சர்ஃபராஸ்கான் 17 பந்துகளில் 45 ரன்கள் எடுத்த போது டிரெஸ்சிங் அறையில் அவரை துக்கி வைத்து கொண்டாடினாராம் கெயில்.
தனக்கும் கெயிலுக்குமிடையேயான நட்பு குறித்து சர்ஃபராஸ் கான் கூறுகையில், ''ஐ.பி.எல். போட்டியின் போது எனக்கும் கிறிஸ் கெயிலுக்குமிடையே நல்ல நட்பு உருவானது. சில சமயங்களில் அவரே எனக்கு உணவு பரிமாறுவார். இனிப்பு வகைகளை சாப்பிட அனுமதிக்கமாட்டார். 2 சிக்கன் துண்டுகளுக்கு மேல் தரமாட்டார். அந்தளவுக்கு எனது உடல்நலம் மீது கிறிஸ் கெயில் அக்கறை காட்டினார்.
அடுத்த மாதம் ஐமைக்காவில் வைத்து கிறிஸ் கெயிலுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. அவரது திருமணத்திற்கு அவசியம் வரவேண்டும் என்று கூறி எனக்கு அழைப்பிதழ் தந்தார். ஆனால் என்னால் ஜமைக்கா போக முடியுமா?- என்று தெரியவில்லை'' என்றார்.
சிறுவயது பையனான சர்ஃபராஸ்கான் மீது கிறிஸ் கெயில் மிகவும் அக்கறை காட்டி வந்துள்ளார். பேட் செய்யும் விதம் குறித்து பல்வேறு டிப்ஸ்களையும் கிறிஸ் கெயில் சர்ஃபராஸ் கானுக்கு வழங்கியதோடு, அவரது திறமையை பட்டை தீட்ட பல்வேறு அறிவுரைகளையும் கொடுத்துள்ளார் கெயில்.
சர்ஃபராஸ்கான் 17 பந்துகளில் 45 ரன்கள் எடுத்த போது டிரெஸ்சிங் அறையில் அவரை துக்கி வைத்து கொண்டாடினாராம் கெயில்.
தனக்கும் கெயிலுக்குமிடையேயான நட்பு குறித்து சர்ஃபராஸ் கான் கூறுகையில், ''ஐ.பி.எல். போட்டியின் போது எனக்கும் கிறிஸ் கெயிலுக்குமிடையே நல்ல நட்பு உருவானது. சில சமயங்களில் அவரே எனக்கு உணவு பரிமாறுவார். இனிப்பு வகைகளை சாப்பிட அனுமதிக்கமாட்டார். 2 சிக்கன் துண்டுகளுக்கு மேல் தரமாட்டார். அந்தளவுக்கு எனது உடல்நலம் மீது கிறிஸ் கெயில் அக்கறை காட்டினார்.
அடுத்த மாதம் ஐமைக்காவில் வைத்து கிறிஸ் கெயிலுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. அவரது திருமணத்திற்கு அவசியம் வரவேண்டும் என்று கூறி எனக்கு அழைப்பிதழ் தந்தார். ஆனால் என்னால் ஜமைக்கா போக முடியுமா?- என்று தெரியவில்லை'' என்றார்.
Post a Comment