Header Ads



மஹிந்தவை படுகொலை செய்வதற்கு உதவிய 2 அமைச்சர்கள்..!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை படுகொலை செய்யும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முயற்சிக்கு, இரண்டு முன்னாள் அமைச்சர்கள் ஒத்துழைப்பு வழங்கியதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு இலக்காகி படுகொலை செய்யத் திட்டமிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தில் முக்கியமான அமைச்சுப் பதவிகளை வகித்து வந்த இரண்டு அமைச்சர்கள் இந்த முயற்சிக்கு, புலிகளுக்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இந்த இரண்டு முன்னாள் அமைச்சர்களும் விரைவில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலைப் மற்றும் அவர்கள் பயன்படுத்தவிருந்த தற்கொலைக் குண்டுகள் ஆகியனவற்றை வடக்கிலிருந்து கொழும்பிற்கு எடுத்துச்செல்ல இந்த முன்னாள் அமைச்சர்கள் உதவியுள்ளனர்.

கடந்த மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களாக இருந்து பின்னர், ஆளும் கட்சியில் இணைந்து இந்த இருவரும் அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சுப் பதவிகள் கிடைக்கப் பெற்றதன் பின்னர் விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த கொலை முயற்சியுடன் அரசாங்க நிறுவனமொன்றின் முன்னாள் பணிப்பாளர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.