இந்த பாராளுமன்றிற்கு அதிகாரம் கிடையாது, கலைக்கப்பட வேண்டும்
பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் 19ம் திருத்தச் சட்டத்தை மலினப்படுத்த முயற்சிக்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டுமென்றே ஐக்கிய தேசியக் கட்சியும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த பாராளுமன்றிற்கு அதிகாரம் கிடையாது எனவும், 2010ம் ஆண்டு மக்கள் வழங்கிய ஆணையையே இந்த பாராளுமன்றம் பிரதிபலிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றம் உடனடியாக கலைக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் ஸ்திரமற்ற தன்மையானது நாட்டுக்கு பாதக விளைவுகளையே ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment