Header Ads



கிழக்கில் ஆட்சி மாறுமா..? முஸ்லிம் உறுப்பினர்களும் பிள்ளையானும் சம்பந்தனை சந்தித்தனர் (படங்கள்)


கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸிற்கு வழங்கிய ஆதரவினை வாபஸ் பெற்றுக்கொண்ட உறுப்பினர்கள் சிலர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைத் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து ஆட்சி அமைப்பது தொடர்பாக இவர்கள் கலந்துரையாடியதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சந்திப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான், அக்கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் முஸ்லிம் உறுப்பினர்கள் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

மேலும் கூட்டமைப்பிற்கு முதலமைச்சர் பதவி வழங்குவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாபஸ் பெற்றுக் கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்களே இவ்வாறு சந்தித்துள்ளனர்.


1 comment:

  1. iya kalai kalapi vaithukondo iruckirar enna mariyathai ivrukalucku

    ReplyDelete

Powered by Blogger.