முஸ்லிம் அமைச்சர்கள் இஷ்டப்படி துள்ளுகின்றனர், அவர்களை எச்சரிக்கிறோம் - எமது அலை இன்னும் ஓயவில்லை
நாட்டில் எல்லா பாகங்களிலும் சிங்களவர்கள் மீள்குடியேற முடியும். அதனை எதர்ப்பதற்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் யார்? தற்போது முஸ்லிம் அரசியல்வாதிகள் மிகவும் மோசமாக செயற்படுகின்றனர். எம்முடன் விளையாட வேண்டாம். நாட்டின் பெரும்பான்மை இனத்தவர்களை சினம் கொள்ள செய்யவேண்டாம். அவ்வாறாயின் எதிர்காலம் மிகவும் மோசமாக அமையும் எனவும் பொதுபலசேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரித்தார்.
கிருலப்பனையிலுள்ள அந்த அமைப்பின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே தேரர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
யுத்தம் இடம்பெற்ற பிற்பாடு வடக்கில் தமிழ் ,முஸ்லிம்களை மீள்குடியேற்றிய போதும் சிங்களவர்களை மீள்குடியேற்றுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல்வேறு அழுத்தங்களின் பிற்பாடு வெலிஓயாவில் சிங்களவர்கள் 5000 பேர் மீள்குடியேற்றப்பட்டனர். எனினும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சிங்களவர்களை மீளகுடியேற்றிய அதிகாரிகளை மிரட்டியுள்ளார். இதற்கு எதிர்ப்பும் வெளியூட்டுள்ளார்.
நாட்டில் பெரும்பான்மை இனத்தவரான சிங்களவர்கள் நாட்டில் அனைத்து பாகங்களிலும் குடியேற முடியும். அதனை எவராலும் கேள்விக்கு உட்படுத்தமுடியாது. எனவே வெலிஓயா குடியேற்றம் தொடர்பில் எதிர்ப்பினை வெளியிடுவதற்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் யார்? அவருக்கு என்ன தகுதி உள்ளது. சிறுப்பான்மை மக்கள் அனைத்து சுதந்திரங்களையும் பெற்று வாழவேண்டும். பௌத்தரகளின் உரிமைகள் கிடப்பில் போடப்பட்டால் அது தவறில்லை. இதுவா நல்லாட்சி.
அத்தோடு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் முஸ்லிம்களை மீள்குடியேற்றிய போது பல்வேறு ஊழல் மோசடிகளை செய்துள்ளார். இது தொடர்பில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த விசாரணையை உரிய முறையில் முன்னெடுத்து அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இதேவேளை தற்போது முஸ்லிம் அமைச்சர்கள் மிகவும் மோசமான முறையில் செயற்பட்டு வருகின்றனர். தமது இஷ்டப்படி துள்ளுகின்றனர். எனவே குறித்த அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம். நாட்டின் பெரும்பான்மை இனத்தவர்களுடன் விளையாட வேண்டாம். எம்முடன் விளையாடினால் பாரிய விளைவை எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும். எமது அலை இன்னும் ஓயவில்லை.
Before Minister Badurdeen's issue, this Gnanasara should be sent to jail for all the Crimes he commited! Where Is the law enforcementent authorities of the Yahapalanaya?
ReplyDeleteஞான சாரரே! உமக்கு தீணி போட்டு வளர்த்து உன்னைக் கடாவாக்கிய கோத்தா எங்கே? ராஜபக்சா எங்கே? இருக்கும் ஆத்திரத்துக்கு சும்மா கத்திக் கத்தி இருக்க வேண்டியது தான். பைத்தியக் காரத்தனமாக அறிக்கை விட்டு விட்டு காலத்தைக் கடத்து. உனது கருத்துக்களை யாரும் எடுப்பதும் இல்லை. உன் பேச்சை பைத்தியமாக அரசாங்கமே கருதும் நிலைதான். மைத்திரியை வெற்றி பெற பாரிய செல்வாக்குச் செலுத்திய உமது கதை இது தான் ஞானா. ஹிஹ் ஹிஹ்ஹீ
ReplyDelete