அரசாங்கம் அறிவித்த சலுகைகள் எங்கே...? மக்கள் விமர்சனம் தெரிவிப்பு
நலிந்த வர்த்தகத்தினருக்கு சலுகைகளை வழங்கும் வகையிலான விடயங்களை உள்ளடக்கியதாக தற்போதைய அரசாங்கத்தினால் 40 நாட்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு-செலவுத் திட்டம் காணப்பட்ட போதும் அவ்வாறான விடயங்கள் முறையாக செயற்படுத்தப்படாதிருப்பது தொடர்பாக மக்கள் புதிய அரசாங்கத்தின் மீது விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்துள்ளனர்.
குறிப்பாக வங்கிகளில் அடகு வைக்கப்பட்டுள்ள நகைகளை மீட்பதற்காக பெண்களுக்கு விசேட நிவாரணங்களை வழங்கும் திட்டம் மற்றும் எரிபொருள் விலைக் குறைப்பினூடாக பொருட்களின் விலைகளைக் குறைத்தல் மற்றும் சேவை கட்டணங்களை குறைத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பாக வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் செயற்படுத்தப்படாதிருப்பது தொடர்பாகவே மக்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
என்ன நடக்குது பதில் சொல்லுங்கோ
ReplyDelete